தற்போது இருக்கும் காலகட்டத்தில் வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் குறுகிய காலத்திலேயே கிடைத்து விடுகிறது. அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை ஜனனி ஆஷிக் குமாரும் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தவர் சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார். கோயம்பத்தூரை பூர்விகமா கொண்ட இவர் ‘மாப்பிள்ளை தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
தனது முதல் சீரியல் எனத் தெரியாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சீரியலில் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சின்னத்திரையில் இவர் பிரபலம் என்றாலும் இவர் அறிமுகமானது என்னவோ சினிமாவில்தான். இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியிருந்த நண்பேன்டா படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மாப்பிள்ளை தொடர்தான்.
இதையும் பாருங்க : மொயின் அலி என்கிட்டே கேட்டாறு வலிமைனா என்னனு ? கூகுள் பண்ணி பாத்தப்ப சிரிப்பு வந்துடிச்சி – அஜித் ரசிகர்கள் குறித்து அஸ்வின். வீடியோ இதோ.
அந்த சீரியலுக்கு பின்னர் அடுத்தடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பாக செல்ல வேண்டும் என்றால் செம்பருத்தி, ஆயுத எழுத்து போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்து இருந்தார். ஆயுத எழுத்து சீரியல் நிறுத்தப்பட்ட நிலையில் இவர் செம்பருத்தி சீரியலில் மட்டும் தொடர்ந்து நடித்து வந்தார். என்னதான் இந்த சீரியலில் இவர் வில்லியாக நடித்து வந்தாலும் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமும் இருக்கிறது.
ஆனால், அந்த சீரியலில் இருந்தும் இவர் திடீரென்று நீக்கப்பட்டார். சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இவரை இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் ஜனனி அசோக் மாடர்ன் உடையில் ஆனால், அதில் பெரும்பாலும் புடவை அணிந்த புகைப்படமாக தான் இருக்கும்.