சீரியல்ல நான் கர்ப்பமாக இருக்கும் போது எனக்கு செய்தது நியாயமே இல்ல – செம்பருத்தி பரதா

0
688
barata
- Advertisement -

வெள்ளி திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை தான் மக்கள் அதிகம் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியலில் ஒன்று தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல். இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் கதை அம்சத்தை தழுவி எடுக்கப்பட்டது ஆகும்.பெரும் வெற்றிகண்ட இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை பரதா. செம்பருத்தி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் மித்ராவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான்.செம்பருத்தி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் மித்ராவின் உண்மையான பெயர் பரதா நாயுடு. இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு திருமணமான நிலையில் சமீபத்தில் தான் இவருக்கு வளைகாப்பு நடந்தது. இந்நிலையில் பிரபல ஊடகம் ஓன்று அவரிடம் பேட்டி எடுத்திருந்தது. அதில் அவர் நடித்தது தாலாட்ட சீரியலில் இருந்து விலகியது குறித்து கேட்டனர்.

- Advertisement -

முதல் கரு கலைந்து விட்டது :

அதற்கு பதிலளித்த அவர் “கொரோன சமயத்தில் நான் கர்ப்பமாக இருந்தேன். அப்போது நான் என்னுடைய உடலை சரியாக பார்த்துக்கொள்ளாத காரணத்தினால் கர்ப்பமான மூன்று மாதத்தில் குழந்தை கலைந்து விட்டது. மனதளவில் அந்த விஷியத்தை எங்கால ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் நாங்கள் இருவரும் மனமுடைந்து போனோம். அதற்கு பிறகு அடுத்த குழந்தை எப்போது வரும் என்று ஏங்கி போயிருந்தோம். மீண்டும் கர்ப்பம் உறுதியானவுடன் எங்களின் கண்களின் மூலம் தான் மகிச்சியை வெளிப்படுத்தினோம் என்றார்.

தாலாட்டு சீரியல் :

அதற்கு பிறகு தாலாட்டு சீரியலில் இருந்து விலகியது குறித்து கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த நடிகை பரதா “நான் அந்த சீரியலை நேர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். பலரும் என்னிடம் செம்பருத்தி சீரியலில் அப்படி ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நடித்து விட்டு ஏன். இப்படி இந்த சீரியலில் நேர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் என்று கேட்டனர். அந்த சீரியலில் என்னுடைய கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது. ஆனால் எனக்கு கர்ப்பமான பாத்து நாட்களில் என்னை தாலாட்டு சீரியலில் இருந்து நீக்கி விட்டனர்.

-விளம்பரம்-

நீக்கிய கரணம் :

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறினால் கொஞ்சம் உதவியாக நடந்து கொள்வார்கள் என்று தான் கூறினேன். அதே போல “தாலாட்டு” சீரியலில் நடித்து கொண்டிக்கும் போதே “மொட்டை ரோஜா” சீரியலிலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தேன். அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது கடினம் எனவே அந்த சீரியலில் இருந்து விலகி தாலாட்டு சீரியலிலேயே நடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறியதும் “தாலாட்டு” சீரியல் குழுவுடன் எனக்கு சில குழப்பமான சூழ்நிலைகள் நிலவியது.

நான் கர்ப்பமாக இருப்பதினால் செக்கப் செல்ல 10 நாட்களை விடுமுறை கேட்டேன். ஆனால் 6 நாட்கள் நடிக்க வேண்டியதிருக்கும் என்பதினால் நடித்து கொடுத்து விட்டு வந்தேன். நான் போகும் போது நாங்களே கூப்பிடுகிறோம் என்று கூறினார்கள். ஆனால் அந்த சீரியலில் இருந்து நான் நடித்த கதாபாத்திரத்யே நீக்கி விட்டனர். பின்னர் 6 மாதம் கழித்து போன் செய்து கேட்டபோது நீங்கள் வியாபாரத்தில் பிஸியாகி விடீர்கள் என்று கூறினார்கள்.

நான் விலக நினைத்த சீரியல் செய்த விஷயம் :

என்னுடைய வேலை வேறு வழ்க்கை வேறு. என்னுடைய கனவே இந்த சீரியல்கள் தான். நான் எந்த சீரியலில் இருந்து விலக வேண்டும் என்று நினைத்தேனோ அதிலேயே தொடர்ந்து நடித்தேன். என்னை “மொட்டை ரோஜா” படக்குழுவினர் நன்றாக பார்த்துக்கொண்டனர். 8 மாதம் வரையில் சீரியலில் நடித்து விட்டு வந்துவிட்டேன். தற்போது எனக்கு ஒன்பது மாதம் என்று கூறினார் நடிகை பரதா.

Advertisement