நான் என்ன சேரியில பிறந்தவனா ? அர்னவ்வின் ஆணவ பேச்சால் திட்டி தீர்த்த ரசிகர்கள்.

0
378
arnav
- Advertisement -

நான் என்ன சேரியில பிறந்தவனா ? என்று அர்னவ் அளித்த பேட்டியை பார்த்து ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்னவ்வும் மற்றும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து இருந்தனர். ஆனால், இதற்கு முன்பே திவ்யாவிற்கு திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? யார் என்று விவரம் எதுவும் தெரியவில்லை. பின் இவர் அர்னவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார். அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் அதை கேட்டதால் திவ்யாவை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார். மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் கூறி புகார் கொடுத்து இருக்கிறார் திவ்யா.

- Advertisement -

அர்னவ் அளித்த பேட்டி:

இந்த நிலையில் தன் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து அர்ணவ் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், என்னுடைய மனைவி கே எம் சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று காவல் நிலையத்தில் இருந்து தகவல் வந்தது. நான் இது குறித்து அவர்களிடம் கேட்கும்போது நீங்கள் அவரை தள்ளி விட்டு அதனால் அவருக்கு ரத்தம் வந்திருக்கிறது என்று புகார் கொடுத்து இருக்கிறார் என்று என்னிடம் கூறினார்கள். அது முழுக்க முழுக்க பொய். அவர் என்னுடைய குழந்தையை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

முதல் திருமணம் குறித்து சொன்னது:

இவளுக்கு பின்னால் நடிகர் ஈஸ்வர் தான் இருக்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எங்களுக்குள் இருந்த பிரச்சனையை பெருசு படுத்தியது அவன் தான். எங்களுக்கு நல்லது செய்வது போல எனக்கு பல பிரச்சனைகளை அவன் தான் கொடுத்தான். நாங்கள் ஐந்து வருடமாக காதலித்து கொண்டிருந்தோம் அவர் விவாகரத்து ஆனவர் என்பது தெரியும். ஆனால், திருமணம் செய்யப் போகும் கடைசி நிமிடத்தில் தான் தனக்கு விவாகரத்து ஆனதையே அவர் சொன்னார். மேலும், அவருக்கு குழந்தை இருப்பதையே எனக்கு சொல்லவே இல்லை. அவருக்கு ஒரு ஆறு வயதில் குழந்தை இருக்கிறது.

-விளம்பரம்-

திவ்யா குறித்து சொன்னது:

நான் அந்த குழந்தையை நிறைய முறை பார்த்திருக்கிறேன். அது தன்னுடைய குழந்தை என்று அவள் சொல்லவே இல்லை. அது தன்னுடைய அக்கா குழந்தை என்று சொல்லி என்னை இத்தனை நாட்களாக ஏமாற்றி இருக்கிறாள். நான் ஐந்து வருடங்கள் காதலித்து விட்டோமே என்று இதையெல்லாம் சகித்துக் கொண்டேன். நான் அவரை பிரிந்து வாழ போகிறேன் என்று சொல்லவே இல்லை. ஆனால், அவர் இந்த குழந்தையை வைத்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். அதை எந்த நோக்கில் அவர் செய்தார் என்பது எனக்கு தெரிய வேண்டும் என்பதால் நான் காவல் துறையில் புகார் அளித்திருக்கிறேன்.

சேரி மக்கள் குறித்து அர்னவ் சொன்னது:

அவள் ரொம்ப கெட்ட வார்த்தைகளை பேசுகிறார். நான் சேரியில் இருந்து வந்தேனா, இல்லை அவள் சேரியில் இருந்து வந்தாலா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு ரொம்ப மோசமாக பேசுகிறார் என்று கூறியிருந்தார். இப்படி அர்னவ் கூறியதற்கு அங்கிருந்த செய்தியாளர், சேரி மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக நீங்க பேசியது ஏன்?என்று கேட்டதற்கு நான் அப்படி சொல்லவில்லை. மொழியைத்தான் சொன்னேன். இவ்வளவு படித்திருந்தும் நாகரிகம் தெரியவில்லை என்று சொல்லி மழுப்பி பேசியிருந்தார். இப்படி அர்னவ் சேரி மக்களை குறித்து பேசி இருக்கும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Advertisement