ரவியும், விஷ்ணுவும் நல்ல பசங்க தான். ஆனா சம்யுக்தா? சின்னத்திரை நடிகை ரிஹானாவின் போஸ்ட்

0
2884
- Advertisement -

விஷ்ணுகாந்திக்கு ஆதரவாக நடிகை ரிஹானா போட்டிருக்கும் போஸ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சில வாரங்களாகவே சின்னத்திரை வட்டாரத்தில் சம்யுக்தா- விஷ்ணுகாந்த் சர்ச்சை தலைவிரித்து ஆடி கொண்டு இருக்கிறது. சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா கடந்த மார்ச் மூன்றாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்ட தகவல் சமீபத்தில் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருமணத்திற்கு பின்னர் சம்யுக்தா தன் நண்பர்களுடன் பேசி வந்ததால் தான் இருவருக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டது என்று விஷ்ணுகாந்த் பேட்டி அளித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதில் அவர் சம்யுக்தா குறித்து பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். ஆனால், விஷ்ணு சொல்வது எல்லாம் பொய். அவருக்கு 24 மணி நேரமும் செக்ஸ் தான் முக்கியம் என்றும் சம்யுக்தா கூறி இருந்தார். இதனால் சம்யுக்தாவிற்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை விஷ்ணுகாந்த் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் விஷ்ணுகாந்தை காதலிப்பதற்கு முன்பாகவே நடிகை சம்யுக்தா, ரவி என்பவரை காதலித்து இருக்கிறார். ரவி குறித்து சம்யுக்தா கூறிய குற்றச்சாட்டு ஆடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. இதன் பின் சம்யுக்தா விஷ்னுவை திட்டி பேசி இருந்தார். இப்படி ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக சின்னத்திரை நடிகை ரிஹானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

- Advertisement -

விஷ்ணுகாந்த் – சம்யுக்தா விவகாரம்:

அதில், உங்ககிட்ட நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புறேன். நான் ஒர்க் பண்ணின எக்ஸ்பீரியன்ஸ்ல விஷ்ணு ஜென்டில்மேன். எந்த பெண் நடிகையிடமும் அவர் பேசி நான் பார்த்ததில்லை. என்கிட்ட ரெண்டு வார்த்தை தான் பேசியிருக்கார். அதுவும் எங்க சீன் வரும்போது தான்! கஷ்டப்பட்டு கொஞ்ச, கொஞ்சமா வளர்ந்து நிற்கும் அவருக்கு இப்படி நடந்ததை ஏத்துக்க முடியல. லைஃப் ஒருதடவை தான் அது நல்லபடியா அமையணும் அது அமையாமல் போனால் கண்டிப்பா அடுத்த முறை அது எப்படி ஆகும்ன்னு நமக்குத் தெரியாது. அதனால இவர் கொஞ்சம் அவசரப்பட்டிருக்க வேண்டாம். கொஞ்ச நாள் போன பிறகு லைஃப்பிற்காக முடிவெடுத்திருக்கலாம். இனியாவது கவனமா இருக்கணும்.

நடிகை ரிஹானா போஸ்ட்:

புரொபஷனல் லைஃப்பை அடுத்த லெவலுக்குக் கொண்டு போக என்னோட வாழ்த்துகள். அவருடைய பர்சனல் நம்பர் கூட என்கிட்ட இல்ல. என் மனசுல இருந்ததை ஷேர் பண்ண மட்டும்தான் இந்தப் பதிவு என்று கூறி இருக்கிறார். இதனை அடுத்து நடிகை ரிஹானா கூறியது, இந்த விவகாரத்தில் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். விஷ்ணு, சம்யுக்தா, ரவி. இந்த மூன்று பேர் கூடவும் நான் சேர்ந்து வேலை செய்து இருக்கிறேன். இந்த பிரச்சனை வரும்போது யார் மேல தப்பு என்று தெரிந்தது. ஏற்கனவே அபினவ்- திவ்யா பிரச்சனையில் பேசியது பாசிட்டிவாகவும் நெகட்டிவ்வாகவும் போனது. அதனால் இவர்களைப் பற்றி ஏன் பேசணும் என்று விட்டுவிட்டேன். ஆனால், அந்தப் பையனுடன் வேலை செய்ததால் அவனைப் பற்றி தெரியும் என்பதனால் தான் நான் இந்த பதிவை போட்டேன். எனக்கு தெரிந்து அந்த இரண்டு பசங்களுமே நல்ல பசங்க தான்.

-விளம்பரம்-

நடிகை ரிஹானா அளித்த பேட்டி:

அந்த பொண்ணு செட்டில் கொஞ்சம் ஆட்டிட்யூடாக தான் இருப்பார். செட்டில் விஷ்ணுவுக்கும் சம்யுக்தாவுக்கும் பார்த்தவுடனே கிரஸ், லவ் எல்லாமே டக்கு டக்குனு நடந்தது. நான் சிங்கிள் பேரண்ட் என்பதனால் அதனுடைய வலி என்னன்னு எனக்கு தெரியும். ரொம்ப வருஷம் பழகிய அர்னவ்- திவ்யாவை விட்டுட்டு போய் விட்டான். இப்ப திவ்யா கைக்குழந்தை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு இருக்காங்க. விஷ்ணு மிடில் கிளாஸ் ஃபேமிலில் இருந்து கஷ்டப்பட்டு ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக எல்லாம் நடித்து இப்ப இந்த அளவுக்கு வந்திருக்கிறான். ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டான். அந்த பொண்ணு அதையும் சூட்டிங் கல்யாண மாதிரி கேஷுவலாக மூவ் பண்ணிட்டாள்.

சம்யுக்தா குறித்து சொன்னது:

அந்த பையன் இப்போ ரொம்பவே மன அழுத்தத்தில் இருக்கிறார். அந்த பொண்ணு ரவி கூட பேசிட்டு தான் இருக்க. அது அவர்களுடைய பர்சனல். அதைப்பற்றி நாம பேச தேவையில்லை. ரவி பல நடிகைகளுடன் நடித்திருக்கிறான். அவனும் மிடில் க்ளாஸ் பேமிலியிலிருந்து கஷ்டப்பட்டு வந்தவன்தான். அவன் அப்படி நடந்திருந்தால் எல்லோரும் சொல்லி இருப்பார்களே? அவன் உடன் நடித்த நடிகைகள் ரவிக்கு சப்போர்ட் பண்ணுவாங்களா? உண்மையா என்ன நடந்தது? அவன் மிஸ் பிஹே பண்ணானா? இல்லையான்னு? அவனுக்கு தான் தெரியும். அவளுக்கு தான் தெரியும். ரவியும் சரி, விஷ்ணுவும் ஒரே மாதிரியான கேரக்டர். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த பசங்களை தேவையில்லாமல் கஷ்டப்படுத்துகிறார்கள் என்று தோணுது. இது மாறின விஷயங்கள் எல்லாம் பார்க்கும்போது பசங்களை ரொம்ப கேர் ஃபுல்லாக வளர்க்க வேண்டி இருக்கு என்று கூறியிருக்கிறார்.

Advertisement