சன் டிவியில் ஒளிபரப்பான ‘வாணி ராணி’ சீரியலில் நடித்த பிரபல நடிகை சங்கீதா பாலன் விபச்சாரம் நடத்தி வந்ததாக சில நாட்களுக்கு முன்னர் சென்னை காவல் துறையால் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த விபச்சார வழக்கில் பல்வேரு இளம் நடிகைகளும் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்தது.
சென்னை அடுத்த பனைபூர் என்ற ஊர் அருகில் உள்ள தனியார் விடுதியில் விபச்சாரம் நடத்தி வந்தாக நடிகை சங்கீதா பாலனை போலீசார் கைது செய்தனர். பிரபல சீரியல் நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சீரியலில் நடிப்பதற்கு முன்னாள் நடிகை சங்கீதா பாலன், படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் முதன் முதலில் நடிகர் ராம்கி நடித்த ‘கருப்பு ரோஜாக்கள்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் அஜித் பற்றி பேட்டியொன்றில் தெரிவித்த சங்கீதா “நடிகர் விஜய் ஒரு நல்ல மனிதர், அவரை போன்று யாராலும் நடனமாடா முடியாது. அதே போன்று நடிகர் அஜித் ஒரு தெய்வப்பிறவி, தான் பழகிய நபர்களை என்றும் மறக்க மாட்டார், அவர் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பழசை எப்போதும் மறக்கமாட்டார் ” என்று தெரிவித்துள்ளார்.