நீருக்கு அடியில் தனது காதலருடன் சீரியல் நடிகை சரண்யா நடத்திய போட்டோ ஷூட் – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா ?

0
1809
saranya
- Advertisement -

சின்னத்திரையில் உள்ள பிரபலமான நடிகைகளில் ஒருவராக சரண்யா திகழ்ந்து வருகிறார். இளசுகள் மனதை கொள்ளை அடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் நடிகை சரண்யா கலைஞர் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்தார். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். ஆனால், அந்த தொலைக்காட்சியில் இரண்டு மாதங்கள் மட்டுமே தான் இருந்தார் .பின்னர் ஜீ தமிழ், புதிய தலைமுறை போன்ற பல தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக பணியாற்றினார். மேலும், இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்திலும் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். பின்னர் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த நெஞ்சம் மறைப்பதில் சீரியலில் நடித்து இருந்தார். நடிகை சரண்யா அவர்கள் முதல் சீரியலிலேயே இளசுகளின் மனதை கொள்ளை அடித்தார்.

- Advertisement -

பின் சன் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட ரன் என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், சரண்யா இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். தற்போது இந்த சீரியலில் இவர் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை சாயா சிங் நடித்து வருகிறார். நடிகை சரண்யா, ராகுல் என்பவரை காதலித்து வருகிறார். இதனை அவரே பல முறை பல பேட்டிகளில் கூறி இருக்கிறார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது காதலருடன் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் நீருக்கு அடியில் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் மற்றவர்களைப் போல நீச்சல் குளத்தில் ஃபோட்டோஷூட்டை நடத்தாமல். கடலுக்கு அடியில் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். இதுவரை இந்தியாவில் இப்படி கடலுக்கு அடியில் சுறாக்கள் சூழ்ந்திருக்க யாரும் போட்டோ ஷூட் நடத்தியது இல்லை என்று கூறியிருக்கிறார் சரண்யா.

-விளம்பரம்-
Advertisement