தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சாம். இவர் தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 12 B, உள்ளம் கேட்குமே போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். இந்நிலையில் இவர் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் சிவகார்த்திகேயன் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியது,
வீடியோவில் 10 : 40 நிமிடத்தில் பார்க்கவும்
நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது எங்களுக்கு பின்னாடி ஒரு பெரிய கேங்கே சினிமாவில் என்ட்ரி ஆனது. அவர்கள் எல்லாம் ஒரு புரோடக்சன் குழுவுடன் தான் நுழைந்தார்கள். ஆனால், எங்களுக்கெல்லாம் அந்த மாதிரி எந்த ஒரு துணையும் இல்லாமல் உள்ளே வந்தோம். அதனால் எல்லாமே மாறியது. இது வந்து சினிமாவில் ஒரு பயணம். தனியா போராடி மேலே வர ரொம்ப நாள் ஆகும். உதாரணம் சிவகார்த்திகேயனை சொல்லலாம்.
இதையும் பாருங்க : மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ள சிம்பு – என்ன ஆச்சி என்ற கலவையில் ரசிகர்கள்.
சிவகார்த்திகேயனின் நிறைய இழந்து, கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து தான் இந்த அளவிற்கு வந்து இருக்கிறார். ஆனால், அவர் கஷ்டப்பட்டு உழைத்ததை மறந்துட்டு ஆங்கரிங் பண்ணவர் நடிகர் ஆகிவிட்டார் என்று சாதாரணமாக சொல்கிறோம். மேலும், அவர் பட்ட கஷ்டங்கள் வலிகள் தான் இந்த இடத்திற்க்கு காரணம். அதேபோல் பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் நான் நடுவராக இருந்தேன். அப்போது அந்த நிகழ்ச்சியில் சிவா இருந்தார்.
அப்போது நான் அவர் நடிப்பெல்லாம் பார்த்து மெய் மறந்து விட்டேன். பின் உனக்கு கடவுள் அருள், திறமை இருக்கு கொஞ்சம் முயற்சி செய் சிவா என்று சொன்னேன். அவரும் சரி என்று சொன்னார். ஆனால், இப்போது அவர் பெரிய உயரத்தில் இருக்கிறார். இருந்தும் ரொம்ப சிம்பிளிசிட்டியாக இருக்கிறார். இப்போ பார்த்தால் கூட சார் நீங்க அன்னைக்கு சொன்னத்தை போல் பண்ணேன் சார் என்று தன்னடக்கத்துடன் பேசினார். அதனால் தான் அவர் இந்த இடத்தில் இருக்கிறார். ரொம்ப சந்தோசமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்