வி ஜே சித்ராவின் தற்கொலைக்கான காரணம் குறித்து மனம் திறந்து அவருடைய தோழியும், நடிகையுமான சரண்யா கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். இவர் முதன் முதலாக மக்கள் டிவியில் தொகுப்பாளினி தான் மீடியாவுக்குள் நுழைந்தார்.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார்.
ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
சித்ரா தற்கொலை:
அந்த அளவிற்கு ரசிகர்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை மனதை பாதித்த ஒன்று. இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் தனது கணவர் ஹேமநாத்துடன் தங்கியிருந்தார்.
சித்ரா வழக்கு:
அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார். இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேமநாத் தான் என்று அவர் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்தார்கள். அதன் பெயரில் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சித்ரா இறந்தும் ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால், இவருடைய திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? என்று இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றது.
சரண்யா அளித்த பேட்டி:
இன்றும் இவருடைய தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று தான் வருகிறது. இந்த நிலையில் சித்ராவின் இறப்பு குறித்து நடிகையும், தோழியும் ஆன சரண்யா சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதில் அவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. எந்த நேரத்தில் நான் லவ் பண்ண தொடங்கினேனோ அப்போதுதான் லவ் காட்சிகள் எல்லாம் சீரியல் நெருக்கமாக எடுத்ததாக சித்ரா கூறினார். இது குறித்து சித்ராவின் அம்மாவும் என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார்.
சித்ரா இறப்பு குறித்து சொன்னது:
என்னால் சமாளிக்க முடியவில்லை. என் கணவர் இதனால் என் மீது கோபப்படுகிறார். என்னை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் சீரியலில் லவ் காட்சிகள் பண்ண மாட்டேன் என்று கூற வேண்டும் என்று சித்ரா என்னிடம் கூறினார். அது மட்டும் இல்லாமல் இதனால் பல விஷயங்களை பயந்து மறைத்து என்னிடம் சிரித்தபடி இருந்தார் சித்ரா. அவருக்கு நான் ஆறுதலும் சொன்னேன். அவருடன் பேசிய ஆடியோ காலையும் என்னிடம் போட்டு காண்பித்து அழுது புலம்பி இருந்தார். முதலிரவு காட்சிகள் எல்லாம் எடுக்கும் போது அவர்களுடைய சண்டை பயங்கரமாக சென்றது என்று கூறியிருக்கிறார்.