திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பே தனக்கு நடந்த கார் விபத்து குறித்து சர்வானந்த் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் சர்வானந்த். இவர் தமிழில் காதல்னா சும்மா இல்லை என்றே படத்தின் மூலம் தான் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் வெளி வந்திருந்த எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து இவர் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருந்தார். இப்படி இவர் தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கில் எக்கச்சக்க படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான கணம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த நிலையில் நடிகர் சர்வானந்த்துக்கு திருமணம் ஆகி இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது நடிகர் சர்வானந்த்துக்கு 38 வயதாகிறது. இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ரக்ஷிதா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.
சர்வானந்த் திருமணம்:
பின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸ் என்ற அரண்மனையில் இவர்கள் இருவருக்கும் கோலாகலமாக ஜூன் 3ஆம் தேதி திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் ராம்சரண், நடிகர் சித்தார்த், அதிதி ராவ் உட்பட பல திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். மேலும் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி இருந்தது.
சர்வானந்த்துக்கு ஏற்பட்ட விபத்து:
இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பு தனக்கு நடந்த விபத்து சர்வானந்த் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதாவது, திருமணம் நடைபெற சில நாட்களே இருக்கும் நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் நகரில் சர்வானந்த் காரில் பயணத்து இருந்தார். அப்போது அவருடைய கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
விபத்து குறித்து சர்வானந்த் கொடுத்த விளக்கம்:
இந்த செய்தி சர்வானந்த் குடும்பத்தினருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் பேர் அதிர்ச்சி அளித்திருந்தது. மேலும், இந்த கார் விபத்து குறித்து சர்வானந்த் கூறியது, என்னுடைய கார் விபத்து மிகவும் சின்ன சம்பவம் தான். உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் நான் வீட்டில் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். யாரும் கவலைப்பட தேவையில்லை. உங்கள் அக்கரைக்கு அனைவருக்கும் நன்றி என்று கூறி இருக்கிறார்.