இரட்டை ரோஜா சீரியலில் இருந்து ஷிவானி அவுட் – அவருக்கு பதில் இனி இவர் தான்.

0
4163
shivani
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானதால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டது. சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது. இப்படி ஒரு நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இரட்டை ரோஜா சீரியலில் இருந்து ஷிவானி வெளியேறி இருக்கிறாராம்.

இதையும் பாருங்க : ஆக்சன் கிங் அர்ஜுன் மகளையும் விட்டு வைக்காத கொரோனா – அவரே வெளியிட்ட தகவல்.

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. சரவணன் மீனாட்சி தொடருக்கு பின்னர் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது இந்த சீரியல் தான் என்று கூட சொல்லலாம்.பகல் நிலவு தொடர் முடிந்த நிலையில், அசீம் – ஷிவானி ஆகியோரை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடர் தொடங்கப்பட்டது. ஆனால் பகல் நிலவு தொடரில் ஜோடிகளை சேனல் அழுத்தம் கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.

அதோடு ஷிவானியை வேண்டா வெறுப்பாக நடிக்க வச்சதாலேயே, என்ன பிரச்னையோ சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே வெளியேறிட்டாங்க என்று கூறியுள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரெட்டை ரோஜா’ என்ற தொடரில் நடித்து வந்தார் ஷிவானி. இந்த நிலையில் தற்போது இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாகவும், அவருக்கு பதிலாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாந்தினி கமிட் ஆகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

Advertisement