அந்த மொழியை கற்றுக்கொண்ட பின் தான் என் வீட்டில் வந்து பெண் கேட்பேன் என்றார், அப்படி தான் செய்தார் – சித்து மனைவி ஷ்ரேயா.

0
740
sidhu
- Advertisement -

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த திருமணம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சித்து- ஷ்ரேயா. இந்த தொடர் மூலம் கதாநாயகனாக சின்னத்திரையில் சித்து அறிமுகமானார். இந்த சீரியலுக்கு முன்பு ஸ்ரேயா அவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி என்ற சீரியலில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திருமணம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து மலர்ந்தது. அதற்கு பிறகு இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் லிவிங் டுகெதரில் இருப்பதாகவும் சில தகவல்கள் வெளிவந்திருந்தன.

-விளம்பரம்-

பின் சித்து அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்ற ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணத்திற்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். திருமணத்திற்குப் பிறகும் இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

ஸ்ரேயா அளித்த பேட்டி:

தற்போது ஸ்ரேயா அவர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் ரஜினி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் ஷ்ரேயா விடம் காதலர் தினத்தை ஒட்டி பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பது, திருமணத்திற்குப் பின்னும் எங்களிடையே காதல் மறையவில்லை. நான் ஒரு டான்சர். பி.காம். ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஆக்டிங் வாய்ப்புகள் வந்தன. கன்னடத்தில் சீரியல், படங்கள் என நடித்தேன். அதற்குப் பின் தமிழில் திருமணம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

சித்து-ஸ்ரேயா காதல்:

இந்த சீரியலின் போது எனக்கும் சித்துவுக்கும் இடையே காதல் எழுந்தது. பின் எங்களுடைய காதலை இரு வீட்டாரிடமும் பேசி சம்மதம் வாங்கணோம். அதுமட்டும் இல்லாமல் என் மனது நினைத்தபடி எல்லாம் சித்து இருந்தார். எனக்கு சித்துவிடம் நிறைய விஷயங்கள் பிடித்திருந்தது. அதனால் தான் சித்துவை இப்போ வரைக்கும் மிஸ் பண்ண கூடாது என்று நினைக்கிறன். என் வாழ்க்கையில் திருமணத்திற்குப் பிறகுதான் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். இது முன்னாடியே தெரிந்திருந்தால் நாங்கள் சீக்கிரமாகவே திருமணம் செய்து கொண்டிருப்போம்.

-விளம்பரம்-

சித்துவை பற்றி ஷ்ரேயா சொன்னது:

சித்து என் வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு. ஒரு பெண் தனக்கான கணவர் எப்படி எல்லாம் வரவேண்டும் என்று எதிர்பார்த்து இருப்பார்களோ? அத்தனை குணங்களும் அவரிடம் உண்டு. அதனால் தான் நான் ரொம்ப அதிர்ஷ்டக்காரி. முக்கியமாக சித்து ரொம்ப சூப்பராக சமைப்பார். அவர் வைக்கும் சிக்கன் குழம்பு, மட்டன் கிரேவி ரொம்ப பிடிக்கும். அவ்வளவு அருமையாக சமைப்பார். எங்கள் வீட்டில் எங்களின் காதலுக்காக வந்து பேசும்போது, துளு மொழி கற்றுக்கொண்டு வந்துதான் பெண் கேட்பேன் என்று சொல்லி, அதனை கற்றுக்கொண்டு வந்துதான் பெண் கேட்டார்.எனக்காக சித்து துளு மொழியை கற்றுக் கொண்டார். இப்படி பல விஷயங்கள் எனக்காக செய்து இருக்கிறார்.

சித்து துளு மொழியை கற்று கொண்ட காரணம்:

நான் வீட்டிற்கு வரும் சில நேரம் அவர் சூட்டிற்கு கிளம்பி கொண்டிருப்பார். அவர் வருகிற சமயத்தில் நான் கிளம்ப வேண்டியதாகிவிடும். இருந்தபோதிலும் எங்களுக்கான நேரத்தை நாங்கள் ஏதாவது ஒரு தருணத்தில் எடுத்துக்கொள்கிறோம். முக்கியமாக எங்களுக்குள் புரிந்து கொள்கிறோம். அந்த அளவுக்கு எங்களிடம் புரிதல் இருக்கிறது. நாங்கள் காதலித்துக் கொண்டிருந்த காலத்தில் காதலர் தினத்தில் சித்து எனக்காக ஸ்பெஷலாக ஒரு பார்ட்டி தயார் செய்து மோதிரம் எல்லாம் கொடுத்து சர்ப்ரைஸ் செய்து இருந்தார். அந்த வருடம் மட்டும் இல்லாமல் எல்லா வருடமும் எனக்காக ஏதாவது ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுப்பார். காதலர்களுக்கு எல்லா நாட்களும் ஸ்பெஷல் தான் என்று கூறி இருக்கிறார்.

Advertisement