பல ஆண்டுகளாக தனுஷூடன் கிசுகிசுக்கப்பட்டு வரும் விஷயம் – முதன் முறையாக ஸ்ருதி ஹாசன் சொன்ன காட்டமான பதில்.

0
778
Dhanush
- Advertisement -

தனுஷ்-ஸ்ருதி குறித்த சர்ச்சைக்கு நடிகை ஸ்ருதிஹாசன் முற்றுப்புள்ளி வைத்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் சிறந்தவர். இவர் 3 ,வை ராஜா வை போன்ற சில படங்களை இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து:

அதுமட்டுமல்லாமல் 2003 ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தில் நட்பே நட்பே என்ற பாடலையும் இவர் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களின் 18 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிவதாக பரஸ்பரமாக முடிவு செய்து இருப்பதாக அறிவித்து இருந்தார்கள்.

விவாகரத்து குறித்த சர்ச்சை:

கடந்த ஆண்டு ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தான் பேசிக் கொண்டிருந்தது. மேலும், பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதோடு இவர்களின் பிரிவிற்கு பல நபர்களை காரணம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் இவர்களுடைய பிரிவிற்கு காரணம் சுருதிஹாசன் என்று சோசியல் மீடியாவில் பல வதந்திகள் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

தனுஷ்-ஸ்ருதிஹாசன் விவகாரம்:

அதாவது, தனுஷ் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 3. இந்த படத்தை தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா தான் இயக்கி இருந்தார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தனுஷுக்கும் சுருதிஹாசனுக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாக ஏற்பட்ட தகவல் வெளிவந்தது. இது ரஜினிது கண்டித்து இருந்தார் என்றும் பல வதந்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டே இருந்தது. மேலும், தற்போது வரை இவர்களுடைய பிரிவிற்கு காரணம் இதுவாக இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.

நடிகை ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி:

இந்த நிலையில் இது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருப்பது, இந்த செய்தி குறித்து நான் பலமுறை விளக்கம் கொடுத்து விட்டேன். தற்போதும் இது எங்களை பின்தொடர்கிறது. ஏன் என்று தெரியவில்லை. இது ஒன்று மட்டும் இல்லை. என்னை சுற்றி இது போன்ற ஆயிரம் வதந்திகள் இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் தனுஷும் ஒரு முக்கியமான நண்பர். ஆனால், அதற்காக வரும் வதந்திகளை எல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் மக்களை குறை சொல்லவில்லை. எப்போதும் என் பின்னாடி மைக்ரோ சிப் பொருத்தி நான் போகும் இடமெல்லாம் பாருங்கள் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement