திருமணமான ஒரே ஆண்டில் இறந்த கணவர், 2வது திருமண நாளில் ஸ்ருதி செய்த செயல்.

0
429
- Advertisement -

கணவர் இழந்து இரண்டாவது திருமண நாளை நடிகை சுருதி சண்முகப்பிரியா கொண்டாடி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சுருதி சண்முகப்பிரியா. இவர் சன் ஆண்டு ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த தொடர் தான் நாதஸ்வரம்.

-விளம்பரம்-

இந்த தொடரை திருமுருகன் எழுதி இயக்கி நடித்தும் இருந்தார். இந்த தொடரில் பலர் நடித்து இருந்தார்கள். குடும்ப உறவுகளின் கதையை மையமாகக் கொண்ட இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுருதி சண்முகப்பிரியா. இவர் நாதஸ்வரம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருந்தார். அந்த தொடருக்குப் பின்னர் இவர் பொன்னூஞ்சல், கல்யாண பரிசு, வாணி ராணி, பொம்முகுட்டி அம்மாவுக்கு போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

சுருதி சண்முகப்ரியா குறித்த தகவல்:

அதேபோல இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து இருந்தார். இந்த தொடரில் இவர் பாரதியின் அக்காவாக நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் மீடியாவில் இருந்து விலகி இருக்கிறார். இருந்தாலும், இவர் எப்போதும் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.

அரவிந்த் -சுருதி சண்முகப்ரியா:

மேலும், இவர் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இவர்களுடைய நிச்சயதார்த்தம் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது. அதன் பின் இவர்களுடைய திருமணம் நடந்தது. இந்த திருமண வரவேற்பில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள். திருமணம் ஆகி இருவரும் சந்தோசமாக வாழ்ந்தார்கள். ஆனால், யார் கண் பட்டுதோ தெரியவில்லை திடீரென்று அரவிந்த்க்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார்.

-விளம்பரம்-

அரவிந்த் இறப்பு:

இதனால் சுருதி மனம் உடைந்து போய் விட்டார். ஸ்ருதி சண்முகபிரியாவின் கணவர் மறைவு சீரியல் உலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. ரசிகர்கள் பலர் சுருதிக்கு ஆறுதல் கூறி இருந்தார்கள். மேலும், கணவர் இறப்பிற்கு பின் சுருதி சன் தொலைக்காட்சியில் சஞ்சீவ் மற்றும் சுருதி நடிக்கும் லட்சுமி தொடரில் தான் நடிக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் அவருடைய மன உறுதியை பாராட்டி வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள்.

சுருதி பதிவு:

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் நடிகை சுருதி சண்முகப்பிரியா தன்னுடைய இரண்டாவது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். இதை அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டு, முதல் முறையாக நீ இல்லாமல் திருமண நாளை கொண்டாடி இருக்கிறேன். நீ என் பக்கத்தில் இருப்பதாக நான் உணருகிறேன். இந்த உலகம் நீ இல்லாத திருமண நாளை கொண்டாடுவதாக சொன்னாலும் நீ என் பக்கத்தில் இருப்பது போல் நான் நினைக்கிறேன். நீ எப்போதும் என் அருகில் தான் இருப்பாய். இதை நான் முழுமையாக நம்புகிறேன் என்று எமோஷனலாக பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement