ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சி கூட்டத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை கை நடுக்கத்தோடு பதிவிட்ட பெண் – அறுதல் சொன்ன ஸ்வேதாவை திட்டி தீர்த்த ரசிகர்கள்.

0
1527
Swetha
- Advertisement -

ஏ ஆர் ரகுமான் குறித்து எழுந்த விமர்சனத்திற்கு பாடகி ஸ்வேதா மோகன் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரி குறித்த சர்ச்சை தான். தமிழகம் முழுவதும் இந்த சர்ச்சை பூதாகரம்பாக வெடித்து கொண்டு வருகிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். மேலும், இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இவர் நிகழ்ச்சி என்றாலே டிக்கெட் சில நிமிடங்களில் விற்பனையாகி விடும். இது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெற திட்டமிட்டு இருக்கிறார்கள். அதோடு வெளிநாடுகளிலும் இந்த இசை கச்சேரி நடக்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், சென்னை பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி நடக்க இருந்தது. ஆனால், திடீர் மழை பெய்து நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் நீர் தேங்கி இருந்தது. இதனால் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் சோகத்தில் இருந்தார்கள்.

- Advertisement -

ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி:

மேலும், இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மானும் சமூக வலைத்தளங்களில் மன்னிக்கவும் கேட்டிருந்தார். தற்போது அந்த இசை கச்சேரி ஞாயிற்று கிழமை நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர். டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் மக்கள் அவதிப்பட்டனர். பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்:

மேலும், 10000 ரூபாய் டிக்கெட் வாங்கி தங்களால் உள்ளே கூட செல்லவில்லை என்று பலரும் புலம்பி இருக்கின்றனர்.ஏ ஆர் ரகுமான் மிகப்பெரிய ஸ்கேம் செய்துவிட்டார். அவர் மோசடி மன்னன் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் அவரை விமர்சித்து வருகின்றனர். ஆனால், சிலர் ஏ ஆர் ரகுமானுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசி வருகிறார்கள். இதனை அடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார்கள்; இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து பதிவிட்ட பெண்ணிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பின்னணி பாடகி ஸ்வேதா மேனன் போட்ட பதிவால் ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ஸ்வேதா பதிவு:

அந்த பதிவில் பாதிக்கப்பட்ட அந்த பெண் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை டீவ்ட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில், இன்று எனக்கு இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வு என்னை ஆட்டி படைக்கிறது. ஞாயிற்றுக்கிழமை கச்சேரிக்கு பிறகு என்னை பிடித்தவர்களில் ஒருவர் நான் அவரிடம் வழி கேட்டபோது என் கண்களை பார்த்தார். அப்போது நான் சோர்வடைந்திருந்தேன். அப்போது அந்த நபர் என்னை பாலியல் ரீதியாக தொட்டார் என்று பாதிக்கப்பட்ட அந்த நபரின் கைகள் நடுங்கும் வீடியோவை ஸ்வேதா மோகன் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

மேலும் அந்த பதிவில் ‘இந்த ட்வீட்டை புறக்கணிக்க முடியவில்லை. என்னுடைய வாழ்நாள் முழுவதும் அமைதி, அன்பு மற்றும் மனிதநேயத்திற்காக நின்ற ஒரு ஐகானுக்கு, இசை எப்போதும் தளர்த்தப்பட்ட அவருடைய கச்சேரியில் இது நடந்தது மிகவும் துரதிஷ்டவசமானது. கலந்து கொண்ட அனைவருக்கும் வழியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏ.ஆர்.ஆர் தனது கச்சேரியில் கலந்து கொள்ளும் ரசிகர்கள் போன்ற குற்றவாளிகளுக்கு தகுதியானவரா? அவர் சிறந்தவர், சிறந்தவர்.

நெட்டிசன்கள் கேள்வி :

ஒவ்வொரு கச்சேரியிலும், ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர் எடுத்துச் செல்ல வேண்டிய மரியாதையை நினைவூட்டுவதற்காக அவர் ஒரு பாடலை குறிப்பாக பெண்களுக்கு அர்ப்பணித்தார். ஆனால், நாம் ஒரு கேவலமான சமூகத்தில் வாழ்கிறோம். இதை முறியடித்து மீண்டும் எழுச்சி பெற உங்களுக்கு ஆற்றலை அனுப்புகிறது! உனக்காக நீயே என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆறுதல் சொல்வதை விட ஏ ஆர் ரஹ்மானின் புகழை பற்றி தான் அதிகம் உங்கள் பதிவில் இருக்கிறது என்று விமர்சித்து வருகின்றனர்.

Advertisement