வாழ்க்கை தருவான்னு நம்பினேன், அவன் என்னை ஏமாற்றிவிட்டான். என் நகைகளை கூட குடுக்கவில்லை – இறப்பிற்கு முன் சில்க் ஸ்மிதா எழுதிய கடைசி கடிதம்.

0
6127
silk
- Advertisement -

சில்க் ஸ்மிதாவின் தற்கொலைக்கு இது தான் காரணமாக இருக்கும் என்று சில்க் ஸ்மிதாவுக்கு குரல் கொடுத்த நடிகை ஹேமமாலினி பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் புகழின் உச்சத்தில் இருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. காந்த கண்ணழகு, வசீகரமான மயக்கும் குரல், தனக்கென ஒரு ஸ்டைல் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை சில்க். இவர் வண்டி சக்கரம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். பின் இவர் ரஜினி, கமல், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த உலகை விட்டு சில்க் ஸ்மிதா மறைந்தாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-
சில்க் ஸ்மிதா – ராதாகிருஷ்ணன்.

சில்க் ஸ்மிதா கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் தற்கொலைக்கு முன்னர் சில்க் ஸ்மிதா தெலுங்கில் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் எழுதிய விஷயங்கள் கண்ணீர் வர வைக்கிறது. அந்த கடிதத்தில் ‘நடிகையாக வர நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். யாரும் என்னை நேசிக்கவில்லை. பாபு (டாக்டர் ராதாகிருஷ்ணன்) மட்டும் என்னிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொண்டார். எல்லோரும் என் வேலையைப் பயன்படுத்திக் கொள்வார்கள். வாழ்க்கையில் எனக்கு நிறைய ஆசைகள் உள்ளன.

- Advertisement -

இதையும் பாருங்க : விக்ரம் படத்தை பார்த்துவிட்டு BJP MLA வானதி போட்ட ட்வீட் – தேர்தலில் வெற்றி பெற்றதை குறிப்பிட்டு அவர் சொன்ன விஷயம்.

எங்கு சென்றாலும் எனக்கு நிம்மதி இல்லை

அவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஆனால் நான் எங்கு சென்றாலும் எனக்கு நிம்மதி இல்லை. எல்லோருடைய செயல்களும் என்னை தொந்தரவு செய்தன. ஒருவேளை மரணம் என்னைக் கவர்ந்திருக்கலாம். எல்லோருக்கும் நல்லது செய்திருக்கிறேன். இன்னும் என் வாழ்க்கை இப்படியா? கடவுளே இது என்ன நியாயம்? நான் சம்பாதித்த சொத்தில் பாதியை பாபுவுக்கு கொடுக்க வேண்டும். நான் அதை மிகவும் நேசித்தேன், நேசித்தேன், உண்மையாக.

-விளம்பரம்-

என்னை ஏமாற்றிவிட்டார் :

அவன் என்னை ஏமாற்ற மாட்டான் என்று தான் நம்பினேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார்.கடவுள் இருந்தால் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார். அவர் என்னிடம் செய்த கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் எனக்கு வலித்தது. தாங்கள் செய்வது நியாயம் என்று நினைக்கிறார்கள். பாபுவும் இதில் உள்ளார். என்னிடம் வாங்கிய நகைகளை திருப்பி தரவில்லை.

பலர் என் உடலைப் பயன்படுத்தினர் :

இனி நான் வாழ்ந்தாலும் பரவாயில்லை. கடவுள் என்னை ஏன் படைத்தார்? ராமுவும் ராதாகிருஷ்ணனும் என்னை மிகவும் தூண்டினார்கள். அவர்களுக்காக நான் பல நல்ல காரியங்களைச் செய்திருக்கிறேன். ஆனால் அவர்கள் என்னை மரணத்திற்கு தள்ளினார்கள். பலர் என் உடலைப் பயன்படுத்தினர். பலர் எனது வேலையைப் பயன்படுத்திக் கொண்டனர். பாபுவைத் தவிர யாருக்கும் நான் நன்றி சொல்லவில்லை.

வாழ்வு தருவதாக ஏமாற்றிவிட்டார் :

கடந்த ஐந்து வருடங்களாக ஒருவர் எனக்கு வாழ்வு தருவதாக கூறி வருகிறார். அந்த வாழ்க்கைக்காக நான் எவ்வளவு ஏங்கினேன் தெரியுமா? ஆனால் அதெல்லாம் வெறும் வார்த்தைகள் என்று தெரிந்ததும் களைத்துப் போனேன். என்னால் இனி தாங்க முடியாது. இந்தக் கடிதத்தை எழுத மிகவும் சிரமப்பட்டேன். எனக்குப் பிடித்த நகைகளைக் கூட நான் வாங்குவதில்லை. இப்போது யார் அதைப் பெறப் போகிறார்கள்? எனக்கு தெரியாது.

Advertisement