சிம்பு நயன் செய்துள்ள சேட்டை, போனை பார்த்து பதறியுள்ள கோபிகா – தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்

0
879
- Advertisement -

சிம்புவும் நயன்தாராவும் சூட்டிங் ஸ்பாட்டில் சேர்ந்து செய்த சேட்டைகள் குறித்து பிரபல தயாரிப்பாளர் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட் வட்டாரத்தில் மிக பிரபலமான நடிகர்களாக திகழ்பவர்கள் சிம்பு-நயன்தாரா. ஒரு காலத்தில் இவர்கள் இருவருமே காதல் ஜோடிகளாக வலம் வந்தது அனைவரும் அறிந்ததே. வல்லவன் படத்தின் மூலம் தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை சிம்பு தான் இயக்கியிருந்தார். இந்த படத்தில் மட்டும் இல்லாமல் நிஜத்திலேயே இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தார்கள். இது குறித்த புகைப்படங்கள், வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருந்தது. அதற்குப் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவருமே பிரேக் அப் செய்து விட்டார்கள். அதற்குப் பிறகு நயன்தாரா, பிரபுதேவாவை காதலித்தார்.

- Advertisement -

நயன் காதல்:

அந்த காதலும் தோல்வியில் தான் முடிந்தது. பின் இவர் விக்னேஷ் சிவனை நீண்ட வருடமாக காதலித்து வந்தார். கடந்த ஆண்டு தான் இவர்கள் இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. தற்போது நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் இருக்கின்றார்கள். அதுமட்டுமில்லாமல் சமீப காலமாகவே நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நயன் படங்கள்:

அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜவான். இந்த படம் உலக அளவில் 1100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த படத்தை அட்லீ இயக்கியிருந்தார். ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருந்தார். இதனை அடுத்து தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருந்த படம் அன்னபூரணி. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இதனை அடுத்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருவதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

சிம்பு காதல்:

அதேபோல் சிம்பு நயன்தாராவிற்கு பிறகு ஹன்சிகாவை காதலித்து இருந்தார். அந்த காதலும் தோல்வியில் முடிவடைந்தது. அதற்கு பிறகு சில காலம் சிம்பு சினிமாவிலிருந்து விலகி இருந்தார். மாநாடு படத்தின் மூலம் இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்திருக்கிறார். அதற்குப் பிறகு சிம்புவின் நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இவர் படங்களிலும் பிஸியாக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் சிம்பு- நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் சேர்ந்து செய்ய சேட்டைகளை குறித்து தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் பேட்டி அளித்திருக்கிறார்.

சிம்பு- நயன்தாரா செய்த சேட்டை:

அதில் அவர், வல்லவன் படத்தின் சூட்டிங் போது ஒருநாள் நயன்தாராவும் சிம்புவும் என்னுடைய போனை எடுத்து நடிகை கோபிகாவின் நம்பருக்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பி இருந்தார்கள். இதை பார்த்த கோபிகா எனக்கு போன் செய்து, என்ன சார் இப்படி எல்லாம் மெசேஜ் அனுப்பி இருக்கீங்க? என்று கேட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. போனை பார்த்த பிறகு நான் ஷாக் ஆகிவிட்டேன். அதற்குப் பிறகு நைட்டு சிம்புவும், நயன்தாராவும் என் போனை வைத்து இப்படி அனுப்பி இருந்தார்கள் என்பது தெரிந்தது. அதை நான் கோபிகாவிடம் சொன்னேன். அவரும் புரிந்து கொண்டார். இப்படி சூட்டிங் ஸ்பாட்டில் நிறைய சிம்பு- நயன்தாரா சேர்ந்து சேட்டைகள் செய்வார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement