ஸ்ரீரெட்டி பாணியில் ஆட்டத்தை துவங்கிய பாடகி சின்மயி..!குறிவைத்துள்ள அடுத்த பிரபலம்..!

0
1168
- Advertisement -

பிரபல பின்னணி பாடகி சின்மயி தமிழ் சினிமாவின் தேசிய விருத்து பெற்ற கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடகி சின்மயின் குற்றச்சாட்டுக்கு நடிகைகள் சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், ஆண்ட்ரியா போன்ற நடிகைகள் #metoo என்ற ஹாஸ்டேக்கின் மூலம் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர்.

-விளம்பரம்-

இவர்களை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் சர்ச்சையை கிளப்பிய நடிகை ஸ்ரீரெட்டியும் சின்மைக்கு ஆதரவாக பேசி இருந்தார். நடிகை சின்மயின் இந்த செயலுக்கு பின்னர் பல்வேறு பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியில் தொல்லை குறித்து சின்மைக்கு தெரியபடுத்தி வருகின்றனர். அந்த பதிவுகளை  #metoo  ஹாஸ்டேக்கின் மூலம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் சின்மயி.

- Advertisement -

இந்நிலையில் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் லஷித் மலிங்கா மீது பெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்ற ஆதாரத்தை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெயர் தெரியாத அந்த பெண் பாடகி சின்மைக்கு அனுப்பியுள்ள அந்த புகாரில்,என்னுடைய பெயரை நான் வெளியிட விரும்பவில்லை, சில வருடங்களுக்கு நான் மும்பை சென்றிருந்த போது எனது தோழியை அவர் தங்கியிருந்த ஓட்டலில் தேடிச்சென்று சந்தித்தேன். , அப்போது ஐபிஎல் நடந்து கொண்டிருந்ததால் சில கிரிக்கெட் வீரர்களும் அதே ஹோட்டலில் தங்கி இருந்தனர்.

Malinga

-விளம்பரம்-

பெயர் தெரியாத அந்த பெண் பாடகி சின்மைக்கு அனுப்பியுள்ள அந்த புகாரில்,என்னுடைய பெயரை நான் வெளியிட விரும்பவில்லை, சில வருடங்களுக்கு நான் மும்பை சென்றிருந்த போது எனது தோழியை அவர் தங்கியிருந்த ஓட்டலில் தேடிச்சென்று சந்தித்தேன். , அப்போது ஐபிஎல் நடந்து கொண்டிருந்ததால் சில கிரிக்கெட் வீரர்களும் அதே ஹோட்டலில் தங்கி இருந்தனர். அப்போது பிரபல இலங்கை கிரிக்கெட் வீரரை நான் பார்த்தேன். அவர் எனது தோழி அவரது அறையில் இருப்பதாகக் கூறினார். நான் உள்ளே சென்று பார்த்தேன் ஆனால் என் தோழி அங்கில்லை. உடனே மலிங்கா என்னை அவரது படுக்கையில் தள்ளி, தவறாக நடந்துகொள்ள முயன்றார். நான் என்னுடைய கண்களையும், வாயையும் மூடிக்கொண்டேன் ஆனால், அவர் என் முகத்தை பயன்படுத்திக் கொண்டார். அந்த நேரத்தில் ஓட்டலின் ஊழியர் வந்து கதவைத்தட்ட நான் அங்கிருந்து சென்றுவிட்டேன். இதை நான் வெளியில் சொன்னால் அவர் ஒரு பிரபலம் என்பதால் நானே அவரின் அறைக்கு சென்றிருப்பேன் என்று தான் கூறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement