என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு இசையமைத்தது யார் ? Dhee கொடுத்த விளக்கம். முடிவுக்கு வருமா சர்ச்சை.

0
808
dhee
- Advertisement -

யூடியூப் சேனல் மூலம் உலக அளவில் மிகப் பிரபலமடைந்த பாடலில் ஒன்று என்ஜாயி என் சாமி. இந்த பாடல் 43 கோடி பார்வையாளர்களைக் கடந்து இன்னும் பிரபலமாகிக் கொண்டு தான் இருக்கிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் வெளியாகி இருந்தது. இந்த பாடலை பாடகர்கள் தெருக்குரல் அறிவு மற்றும் தீ(dhee) பாடி இருந்தார்கள். மேலும், இந்த பாடலை சமீபத்தில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பாடி இருந்தார்கள். உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த பாடல் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன் பாடகிகள் தீ மற்றும் மாரியம்மாள் ஆகியோர் பாடி இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், இந்த பாடலை எழுதி, அதில் நடித்திருந்ததெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டுமில்லாமல் ஏன் அதில் அறிவு இடம்பெறவில்லை? அவரை ஓரங்கட்டப்பட்டு விட்டாரா? என்றெல்லாம் பல தரப்பில் இருந்து கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தது. இப்படி சோசியல் மீடியாவில் எழுந்த தொடர் கேள்விகளுக்கு நேற்றைய தினம் அறிவு விளக்கம் அளித்திருந்தார். அதில் பாடகர் அறிவு கூறியிருந்த விளக்கம், என்ஜாயி பாடலை நானே இசையமைத்து, எழுதி, பாடி, நடித்து இருந்தேன்.

- Advertisement -

என்ஜாய் எஞ்சாமி சர்ச்சை :

யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலோடியையோ அல்லது ஒரு வார்த்தையோ எழுதிக் கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தூக்கம் இல்லாமல் மன அழுத்தம் நிறைந்த இரவு, பகலை எல்லாம் இந்த பாடலுக்காக செலவழித்து உழைத்து இருந்தேன். இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான். அதில் சந்தேகம் இல்லை. நீங்கள் உறங்கும்போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும்போது ஒருபோதும் உங்களிடம் இருப்பதை யாராலும் அழித்துவிட முடியாது.

சந்தோஷ் நாராயணன் கொடுத்த விளக்கம் :

உண்மை எப்போதும் வெல்லும் என்று பதிவிட்டிருந்தார். இதனையடுத்து இந்த பாடலை தயாரித்து வெளியிட்ட சந்தோஷ் நாராயணன் கூறியிருந்தது, நமது வரலாற்றையும், இயற்கையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடலை உருவாக்கும் யோசனை ஒன்றை கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் என்னிடம் பாடகி சொல்லியிருந்தார். அதன்பிறகு நான் இசை அமைத்து, பதிவு செய்து தீ மற்றும் அறிவுடன் என்ஜாய் என்சாமி பாடலை இணைந்து பாடினேன். மேலே கூறப்பட்ட என்னுடைய பணியானது உலகளவில் தயாரிப்பாளர் என்று குறிப்பிடப்படுகிறது.

-விளம்பரம்-

தீ கொடுத்த விளக்கம் :

உலக அளவில் தனிப்பாடல்களை உருவாக்குபவர்கள் அப்படித்தான் குறிப்பிடுவார்கள் என்பதை இந்த துறை சார்ந்த பலரும் ஏற்கனவே அறிவார். நான், தீ மற்றும் அறிவு ஆகிய மூன்று பேரும் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பிற்காகவும், தனிப்பாடல்கள் மேல் எங்களுக்குள்ள காதலுக்காக ஒன்றாக இணைந்து இந்த பாடலில் நாங்கள் மூவருமே எங்களது பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து ஒத்துக்கொண்டோம். தீ மற்றும் அறிவு பாடலை பாட ஒப்புக் கொண்டனர். இருவரும் சேர்ந்து பாடலுக்காகவும் பணியாற்றி வந்தார்கள். தீ-யின்பல வரிகளுக்கு அவரே இசை அமைத்தார். அறிவு பாடல் வரிகள் எழுத ஒப்புக் கொண்டார். நான் மீதி இசையையும், அறிவு பகுதிக்கான ட்யூனையும் கம்போஸ் செய்தேன்.

3 பேரும் சமமாக பகிர்ந்து உள்ளோம்

இந்த பாடலின் வருமானம் மற்றும் உரிமை அனைத்தும் தீ, அறிவு மற்றும் நான் ஆகிய 3 பேரும் சமமாக பகிர்ந்து உள்ளோம் என்பதை நான் வெளிப்படையாக இருக்க விரும்புகிறேன் என்று கூறி இருந்தார். இதனையடுத்து தற்போது பாடகி தீ இது குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர், என்ஜாயி என் சாமி பாடலுக்கான வருமானம் மற்றும் அதன் உரிமையை நான், சந்தோஷ் நாராயணன், அறிவு ஆகியோர் அனைவரும் சமமாக பகிர்ந்து இருக்கிறோம். அதேபோல இப்பாடலின் வரிகளுக்காகவும், சொல்ல வரும் கருத்துகாகவும் குழுவின் அனைவருமே இணைந்து பணியாற்றினோம். என்னை பொருத்தவரை இந்த பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கி இருக்கிறேன்.

அறிவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் :

ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவரையும் குறிப்பாக அறிவு குறித்து பெருமை உடனே பேசி உள்ளேன். இவர்கள் இருவரின் முக்கியத்துவத்தை எந்த கட்டத்திலும் நான் குறைத்து மதிப்பிட்டது கிடையாது. இந்த பாடலுக்கான வரவேற்பு கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மேடையிலும் இருவரின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தி வருகிறேன். அதிலும் குறிப்பாக பாடகர் அறிவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அவருடைய குரல் அதிகம் வெளியே தெரிய வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். உண்மையில் அவருடைய கருத்துக்களை முதன்மை பெறவேண்டும் என்றே நான் சொல்வேன்.

இப்பாடலுக்கு கிடைக்கும் ஒவ்வொரு புகழும் உச்சமும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுக்கு கிடைக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். அதுமட்டுமில்லாமல் நானும், பாடகர் சானும் ரோலிங் ஸ்டோன் இந்தியா இதழின் அட்டைப்படத்தில் இடம் பெற்றிருந்தது. அதற்கு காரணம், அப்போது நாங்கள் இருவரும் ஒரு ஆல்பம் பாடலுக்காக இணைந்து பணியாற்றி இருந்தோம். அதன் அட்டைப் படமே அது. மற்றபடி அது என்ஜாயி என் சாமி பாடல் அல்லது நீயே ஒளி பாடலுக்கானதோ இல்லை என்று கூறி இருந்தார்.

Advertisement