இனி ரஹ்மானுக்கு படாதான்னு சொன்னார் இளையராஜா . ஆனா அதுக்கு அப்புறம் என்ன கூப்படவே இல்ல – பிரபல பாடகி சொன்ன ஷாக்கிங் உண்மை.

0
345
- Advertisement -

ஏ ஆர் ரகுமான் இசையில் பாடிய பின் இளையராஜா எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று பாடகி மின்மினி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான் .

-விளம்பரம்-

இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதன் பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். மேலும், இவர் மேற்கத்திய இசையை மக்களுக்கு கொண்டு சென்றவர். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர்.

- Advertisement -

ஏ ஆர் ரகுமான் திரைப்பயணம்:

சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலைநிமிரச் செய்தவர் ரகுமான். இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார் ரகுமான். சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்திற்கு ரகுமான் தான் இசை அமைத்து இருந்தார். இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

ரோஜா படத்தில் பாடகி மின்மினி:

தற்போது இவர் உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இதை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையில் பாடிய பிறகு தான் பாடகி மின்மினிக்கு வாய்ப்பு கிடைக்காத தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் தான் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன ஆசை என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது.

-விளம்பரம்-

பாடகி மின்மினி குறித்த தகவல்:

இந்த பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். இந்த பாடலை பாடகி மின்மினி தான் பாடியிருந்தார். இதற்கு முன்னதாக இவர் இளையராஜா இசையில் பாடி இருக்கிறார். ரோஜா படத்திற்கு பின் இவர் பல பாடல்களை பாடி இருக்கிறார். இவர் 1993 வரை பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார். பின் திடீரென்று இவருக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக இவரால் பாட முடியவில்லை. இதனால் இவர் பல சிகிச்சைகளையும் எடுத்து இருக்கிறார். மேலும், முன்பு போல் இவரால் அதிக பாடல்கள் பாடவில்லை என்றாலும் சில பாடல்களின் பாடி கொண்டுதான் வருகிறார்.

பாடகி மின்மினி அளித்த பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் இவர் மலையாள இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். அதில் அவர் இளையராஜா குறித்து கூறியிருந்தது, ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை என்ற பாடல் நான் பாடினேன். இந்த பாடல் தான் எனக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு முன்பு எனக்கு ஒவ்வொரு படத்திலும் பாடுவதற்கு இளையராஜா வாய்ப்பளித்திருந்தார். ஆனால், ஏ ஆர் ரகுமானின் இசையில் பாடிய பிறகு இளையராஜா எனக்கு வாய்ப்பை வழங்கவே இல்லை. அதற்கு காரணம் என்ன? என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement