மனோஜை பார்த்த பீதியில் முகத்தை மறைத்த ஜீவா – பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்.

0
130
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. விஜயாவின் சதியால் மீனா நடத்தி வந்த தள்ளுவண்டி கடையை அதிகாரிகள் வந்து கொண்டு சென்றுவிட்டனர். மீனா எவ்வளவோ கெஞ்சியும் அவரது கடையை அதிகாரிகள் வேனில் ஏற்றி கொண்டு சென்றுவிட்டனர். இதனால் மனமுடைந்து போன மீனா, இனி வீட்டில் இருக்கும் வேலைகளை செய்துகொண்டு வீட்டிலேயே இருக்கிறேன் என்று கண்ணீருடன் புலம்புகிறார்.

-விளம்பரம்-

- Advertisement -

இதனால் அவருக்கு புது பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார் முத்து. இதனை கண்ட மனோஜ், ரோகிணியிடம் அவங்க ரெண்டு பேரும் என்னை விட படிக்காதவர்கள் அவங்களுக்கு எல்லாம் நடக்குது. எனக்கு மட்டும் நடக்க மாட்டுது என்று புலம்புகிறார். இதற்கு ரோகிணி, அவங்க ரெண்டு பேரும் வேலை செய்கிறார்கள் அதான் எல்லாம் நடக்குது என்று கூறுகிறார். இதனால் கோபமடைந்த மனோஜ், அப்போ நான் வேலைக்கு போகவில்லை என்று குத்திக்காட்றியா என்று கோபம் கொள்கிறார்.

இதனால் மனோஜை, ரோகிணி சமாதானம் செய்கிறார். இதெற்கெல்லாம் ஒரே வழி நீ தொலைத்த 27 லட்சம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று கூறுகிறார். ஜீவாவை கண்டுபிடித்து எப்படியாவது அவள் கொண்டு சென்ற பணத்தை வாங்க வேண்டும் என்று கூறுகிறார். முதலில் அவள் கனடாவில் எங்கு இருக்கிறாள் என்று அவளை அனுப்பி வைத்த ஏஜென்சியிடம் சென்று விசாரிக்கலாம்’ என்று மனோஜிற்கு யோசனை கூறுகிறார். ஆனால், ஏஜென்ஸியில் ஜீவாவின் விவரத்தை தர மறுத்துவிட்டனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கனடாவில் இருந்து சென்னை வந்துள்ள ஜீவா முத்துவின் காரிலேயே பயணித்து கொண்டு இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சிறையில் இருக்கும் ரோகினியின் தந்தை வெளியில் வர நேர்த்திக்கடன் செய்ய வேண்டும் 48 நாள் தரையில பாய போட்டு படுக்கனும், ஒரு நேரம் சாப்பிட வேண்டும் விஜயா கூறுகிறார். . இதனிடையே ஜீவாவுடன் காரில் பயணித்து கொண்டு இருக்கும் முத்து ஜீவாவிடம் ஒரு பத்து நிமிஷம் தான் போற வழியில கோயிலுக்கு போயிட்டு வரவா என கேட்க, சென்னையில் உங்க கார்ல தான் நான் வரப்போகிறேன்.

அதனால நீங்க போயிட்டு வாங்க என ஜீவா  சொல்லுகிறார்.இதனை தொடர்ந்து ரோகிணி புடவை கட்டி அவருக்கு தலையில் தண்ணீர் ஊற்றி மாலை போட்டு பரிகாரம் செய்ய ஆரம்பிக்கின்றார்கள். இப்படி ஒரு நிலையில் ஜீவாவுடன் கோவிலுக்கு செல்கிறார் முத்து. அப்போது ஜீவா காரிலேயே இருக்கிறார். பின்னர் மனோஜ் போன் வர, கோவிலுக்கு வெளியில் வந்து போன் பேசிக்கொண்டு இருக்கிறார்.

அப்போது முத்துவின் காரில் அருகே வந்து மனோஜ் போன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது அவரை கண்ட ஜீவா, அதிர்ச்சியடைந்து தனது முகத்தை மூடிக்கொண்டு மறைகிறார். ஆனாலும் கடைசி வரை மனோஜ், ஜீவாவை பார்க்கவில்லை. இறுதியில் முத்து வந்ததும் காரை எடுக்க சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டார் ஜீவா. இதனை தொடர்ந்து மீண்டும் ரோகினியை பரிகாரம் என்ற பெயரில் டார்ச்சர் செய்கிறார் விஜயா. இப்படியாக இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.

Advertisement