விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கோவிலில் மீனாவிடம் ஒருவர், உன் புருஷனுக்கு நேரம் சரியில்லை. கவனமாக பார்த்துக் கொள் என்று சொன்னார். இதனால் மீனா சாமி கும்பிட்டு மந்திரத்த கயிறு கொண்டு சாமி முத்துவிற்கு கட்டி விட்டார். அதற்கு முத்து, எனக்கு ஒன்னும் நடக்காது என்று சொல்லியும் மீனா பயப்பட்டார். பின் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது தலையனை வைத்து விளையாடி இருந்தார்கள். அப்போது தெரியாமல் விஜயா மீது தலையணை பட்டு விட்டது. இதனால் விஜயா பயங்கரமாக கோபப்பட்டு இருந்தார். பின் அண்ணாமலை அந்த பிரச்சனையை முடித்து வைத்தார்.
இன்னொரு பக்கம் ரோகினி, தன்னுடைய தோழி வித்யா வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு வந்து வித்யாவின் காதலர் முருகன், ரோகினி இடம் பேசி இருந்தார். முருகன், ரோகினி, நல்லபடியாக உன் வாழ்க்கை அமையட்டும் என்று வித்யாவிடம் வாழ்த்து சொன்னார். அதன் பின் வந்த ரோகினி அம்மா, உனக்கு திருமணமாகி குழந்தை இருக்கும் விஷயத்தை முத்து, மீனாவிடம் சொல். வீட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் அவர்கள் தான் துணையாக இருப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், பயங்கரமாக கோபப்பட்டு தன் அம்மாவை திட்டி அனுப்பி விட்டார் ரோகினி.
சிறகடிக்க ஆசை:
ரோகினிக்கு போன் செய்த சிட்டி, முத்துவின் வண்டி சாவியை ஒரு 15 நிமிடத்திற்கு எனக்கு வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு தொந்தரவு செய்த மேனேஜர் இல்லையென்றால் பிடியில் தான் இருக்கிறார் என்று மிரட்டி இருந்தார். அதனால் வேறு வழியில்லாமல் ரோகினி சரி என்றார். இன்னொரு பக்கம் முருகன்- வித்யா இருவருமே தாங்கள் புதிதாக வாங்கும் பிளாட்டிற்கு பணம் கொடுக்க முத்து, மீனாவை அழைத்தார்கள். ஆனால், அந்த பிளாட்டை கதிர் தான் முருகனுக்கு விற்க இருந்தார். அங்கு வந்த முத்து-மீனா இருவருமே கதிரையும் அவர் மனைவியும் பார்த்து ஷாக் ஆகி அவர்களை மிரட்டி கேட்டார்கள்.
நேற்று எபிசோட்:
அவர்கள் பணத்தை ஏமாற்றி சென்ற விஷயத்தை ஒத்துக்கொண்டு பணமெல்லாம் செலவாகிவிட்டது என்றார்கள். பின்னர் மனோஜ், ரோகினிக்கு தகவல் சொல்லி வர வைத்தார்கள். அவர்கள் வந்து சொல்லி அடித்து பணத்தை கேட்டார்கள். அதற்குப் பின் முத்து, போலீசுக்கு சொல்லிவிட்டார். போலீஸ் கதிர், அவர் மனைவி இருவரையும் கைது செய்தது. ரோகினி, முத்து மீது கோபப்பட்டார். பின் வீட்டிற்கு வந்த நான்கு பேருமே கதிர் விஷயத்தை சொன்னார்கள். பணம் கிடைக்கவில்லையா? என்று விஜயா கேட்க, போலீஸ் விசாரித்து சொல்வார்கள் என்றார்கள். அதற்கு ரோகினி, எல்லாத்துக்கும் முத்து-மீனா தான் காரணம். போலீசுக்கு தகவல் சொல்லவில்லை என்றால் பணத்தை வாங்கி இருக்கலாம் என்று வழக்கம்போல குறை சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இப்படி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ்-ரோகினி இருவரும், முத்துவால் தான் எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். உடனே அண்ணாமலை, முத்து செய்தது சரிதான் என்று அவர்களுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். அதற்குப் பின் ரோகினிக்கு போன் செய்த மேனேஜர், எனக்கு பணம் வேண்டும், இல்லையென்றால் உன்னை பற்றிய உண்மையை வீட்டில் சொல்லி விடுவேன் என்று வழக்கம்போல மிரட்டுகிறார். பின் சிட்டிக்கு போன் செய்த ரோகினி, மேனேஜர் ஃபோன் செய்ததை சொல்லுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு சிட்டி,நீங்கள் எனக்கு முத்துவின் வண்டி சாவியை எடுத்து கொடுத்தால் அந்த மேனேஜர் உங்களை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். ரோகினி ஒத்துக்கொள்கிறார். பின் இரவு எல்லோரும் தூங்கிய பிறகு வீட்டிற்கு வந்த சிட்டிவிடம் ரோகினி முத்துவின் வண்டி சாவியை யாருக்கும் தெரியாமல் கொடுத்து விடுகிறார். பின் சிட்டி, முத்துவின் காரில் பிரச்சனை ஏற்படுமாறு செய்து வைக்கிறார்.
மறுநாள் காலையில் அண்ணாமலை அனாதை இல்லத்திற்கு தான் போடாத, தேவையில்லாத துணிகளை எல்லாம் கொடுக்கிறார். இதனால் வீட்டில் உள்ள மற்றவர்களுமே தங்களுடைய தேவையில்லாத துணிகளை கொடுக்க ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால், விஜயா மட்டும் முடியாது என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது