விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா வீடியோவால் மீனா வீட்டில் கலவரம் வெடித்தது. பின் சத்யாவை பாதுகாப்பாக தன்னுடைய நண்பர் செல்வம் வீட்டில் தங்க வைத்தார் முத்து. அதற்குப்பின் போலீஸ் இடம் சத்யா மீது விஜயா கம்பளைண்ட் கொடுத்தார். பின் மீனா வீட்டை விட்டு வெளியே போகணும் என்று விஜயா சொன்னதற்கு அண்ணாமலை முடியாது என்றார். உடனே கோபத்தில் விஜயா வீட்டை விட்டு வெளியே வந்து பார்வதி வீட்டில் தங்கி இருக்கிறார். பின் மீனாவின் அம்மாவை போலீஸ் கைது செய்தது. எப்படியோ கெஞ்சி கூத்தாடி மீனாவின் அம்மாவை முத்து வெளியில் கூட்டிட்டு வந்தார்.
இன்னொரு பக்கம் சிட்டி, நாங்கள் அடித்த அடியில் இவன் நெஞ்சை பிடித்து விழுந்து விட்டான். செத்துப் போயிட்டானா? போலீஸ் கேஸ் ஆகிவிடும். உங்கள் பெயரை தான் சொல்லுவேன். அதெல்லாம் வேண்டாம் என்றால் அவனுக்கு மருத்துவ செலவுக்கு 2 லட்சம் கொடுங்கள் என்று சொல்ல, பிஏ நிலைமையை பார்த்து ரோகினியும் பணத்தை ரெடி பண்ணுகிறேன் என்று கிளம்பி விட்டார். ஆனால், பிஏவிற்கு ஒன்றுமே ஆகவில்லை. இருவருமே சேர்ந்து ரோகினி இடம் பணத்தைப் பறிக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் முத்து, வக்கீலை பார்த்து நடந்ததை சொன்னார். அவர், கம்ப்ளைன்ட் கொடுத்தவர் வாபஸ் வாங்கிவிட்டால் பிரச்சனை இல்லை என்று சொன்னார். உடனே மீனா-முத்து இருவருமே வீட்டிற்கு வந்து அண்ணாமலையிடம் நடந்ததை சொல்லி எடுத்து புரிய வைத்தார்கள். அண்ணாமலையும் மனமிரங்கி விஜயாவிடம் பேச அவர் இருக்கும் இடத்திற்கு போனார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், அண்ணாமலை, கேஸை வாபஸ் வாங்க சொல்லி விஜயாவிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், விஜயா முடியாது என்று மறுக்கிறார்.
இன்றைய எபிசோட்:
அண்ணாமலையும் கெஞ்சி கேட்டவுடன் விஜயா, முத்து- மீனா வீட்டை விட்டு வெளியே போனால் நான் கேசை வாபஸ் வாங்குவேன் என்று சொன்னவுடன் அண்ணாமலை அதிர்ச்சியாகி வந்து விடுகிறார். பின் ரோகினி- மனோஜ் இருவரும் கேஸை வாபஸ் வாங்க வேண்டாம் என்று விஜயாவிடம் சொல்ல, அவரும் முடியாது என்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் அண்ணாமலை, விஜயா சொன்ன விஷயத்தை சொல்ல, முத்துவால் எதுவுமே பேச முடியவில்லை. நீங்கள் வீட்டை விட்டு வெளியே போனால் தான் வாபஸ் வாங்குவேன் என்கிறார் என்று சொன்னவுடன் இருவருமே அமைதியாகி விடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
பின் சுருதி- ரவி இருவருமே முத்து,மீனாவிற்கு சப்போர்ட் ஆக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வக்கீல், இது ரொம்ப கிரிட்டிகள். சத்யாவை வெளியே எடுப்பது ரொம்ப கஷ்டம். நான் என்னால் முடிந்தவரை செய்கிறேன் என்று சொல்கிறார். அந்த சமயம் பார்த்து சீதாவிற்கு மாப்பிள்ளை பார்த்த வீட்டில் இருந்து போன் வருகிறது. அவர்கள் சத்யா வீடியோவை தெரிந்து கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்கிறார்கள். கோபப்பட்டு முத்துவும் திட்டி வைத்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வக்கீல், நீங்கள் பணத்தை ஏற்பாடு செய்யுங்கள். நான் எப்படியாவது சத்யாவை வெளியில் எடுக்கிறேன் என்று முத்து-மீனாவிற்கு நம்பிக்கை கொடுக்கிறார். பின் அந்த வக்கீல் விஜயாவை சந்தித்து, சத்யா ஜெயிலில் இருப்பதால் உங்களுக்கு ஒரு ப்ரோஜனமும் இல்லை. உங்களுக்கு நான் ஐம்பதாயிரம் பணத்தை தருகிறேன் வாபஸ் வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்ல, விஜயா, அது முடியாது. எனக்கு 2 லட்சம் வேண்டும் என்றவுடன் வக்கீல் ஒத்துக் கொள்கிறார். விஜயாவும் கேஸை வாபஸ் வாங்க சரி என்று சம்மதிக்கிறார்.