விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சவாரியில் முத்து, மனோஜினுடைய முன்னாள் காதலி ஜீவாவை அழைத்துக் கொண்டு போனார். அப்போது ஜீவா, ஒரு இடம் வாங்குகிறேன். ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ் போகணும். போன முறை ஒரு பிராடு என்னிடம் 30 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டது என்று சொன்னார்.
பின் ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸில் ஜீவா, ரோகினி- மனோஜை பார்த்தவுடன் கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் முத்துவுக்கும் அவருடைய மனைவிக்கும் பரிசு ஒன்றைக் கொடுத்தார் ஜீவா. இன்னொரு பக்கம் பங்களாவுடைய உண்மையான ஓனர் வந்தார்.
அப்போது அவர், யார் நீங்கள்? எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு மனோஜ், நான்தான் இந்த பங்களாவின் ஓனர் என்று சொல்ல, உண்மையான ஓனர் நான் தான். அவர்கள் இங்கு வாடைக்கு இருந்தவர்கள் என்று சொன்னவுடன் எல்லோருமே அதிர்ச்சி ஆனார்கள். பின் மனோஜ் அந்த போலி ஓனருக்கு போன் செய்து பார்த்தார். ஆனால், போன் ஸ்விச் ஆப். நேற்று எபிசோட்டில் போலி ஓனர் போன் எடுக்கவில்லை என்றவுடன் மனோஜ் பதறி இருந்தார். உடனே ஒரிஜினல் ஓனர், அவன் எனக்கே ரெண்டு மாசம் வாடகை கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டிருந்தான். உங்களையும் ஏமாற்றி பணத்தை வாங்கி விட்டான் என்று சொன்னதை கேட்டவுடன் ரோகினி மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.
சிறகடிக்க ஆசை:
விஜயா, மனோஜ்க்கு பயங்கர ஷாக். முத்து, அவனைப் பார்த்ததும் ஏமாற்றுக்காரன் என்று தெரிந்தது. யாரும் என் பேச்சை கேட்கவில்லை என்று திட்டினார். பின் அந்த ஓனர், எல்லோரையும் காலி செய்ய சொல்ல, அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம் இருந்தது. பின் அங்கு வந்த போலீஸ், அவர்களிடம் கம்பிளைன்ட் வாங்கி கொண்டு வீட்டை காலி செய்ய சொன்னார்கள். வேறு வழியில்லாமல் வேதனையில் எல்லோரும் தங்களுடைய வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
நேற்று எபிசோட்:
பின் எல்லோருமே மனோஜை திட்டிக் கொண்டிருந்தார்கள். ரோகினி- விஜயா இருவரும் மனோஜ்க்கு சப்போர்ட் செய்து பேச, அண்ணாமலைக்கு கோபம் வந்து விஜயாவை திட்டிவிட்டார். உடனே ரோகினி-முத்துவுக்கு இடையே வாக்குவாதம் ஆனது. அண்ணாமலை, அந்த போலி ஓனரை கண்டுபிடிக்க வேண்டும் என்று முத்துவிடம் பொறுப்பை ஒப்படைத்தார். முத்து, மனோஜிற்கு வீடு வாங்க சொன்னா அவருடைய நண்பரை விசாரித்தார். அவர், எனக்கு ஒரு மாதம் தான் பழக்கம். அவரைப் பற்றி தெரியாது என்று சொன்னவுடன் முத்துக்கு ஷாக் ஆனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ், பங்களா வாங்க இருந்த இடத்திற்கு சென்று முத்து விசாரிக்கிறார். அதற்குப்பின் ஜீவா கொடுத்த கண்ணாடியை தன்னுடைய மனைவிக்கு போட்டுவிட்டு அழகு பார்க்கிறார் முத்து. அப்போது போனை வாங்கி பார்த்த சீதா, இந்த பெண் உங்க கல்யாணத்தில் பார்த்தேன். மனோஜிடம் ரொம்ப நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருந்தார் என்று சொன்னவுடன் மீனா- முத்துவுக்கு சந்தேகம் வருகிறது. ஒருவேளை இவர் மனோஜ் உடைய காதலியாக இருப்பாரோ? என்று சந்தேகத்தில் முத்து அவருடைய வீட்டிற்கு போகிறார். அங்கு விசாரித்த போது தான் ஜீவா, மனோஜ் காதலி என்பது தெரிய வருகிறது.
சீரியல் ட்ராக்:
பின் முத்து அவரிடம் சண்டை போட்டு பணத்தை கேட்கிறார். உடனே ஜீவா, நான் மொத்த பணத்தையும் போன முறையே வட்டியுடன் செட்டில்மென்ட் செய்துவிட்டேன். அதற்கு போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டதே நீதான் என்று சொன்னவுடன் முத்து பழசை நினைத்து பார்க்கிறார். இதை வீட்டில் அவன் சொல்லவே இல்லை, எங்களை ஏமாற்றி விட்டான் என்று முத்து சொல்ல, மனோஜ் சரியான பிராடு. அதனால் தான் நான் அவனை விட்டுப் போனேன் என்று சொல்கிறார். பின் இந்த விஷயத்தை வீட்டில் எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்றதற்கு ஜீவா ஒத்து கொள்கிறார். கோபத்தில் வீட்டிற்கு வந்த முத்து, எல்லோரையும் வரவைக்கிறார். யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.