ஒரு நாளைக்கு சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் வாங்கும் சம்பளம் – யார் அதிகம்ன்னு நீங்களே பாருங்களே!

0
226
- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் வாங்கும் சம்பள பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை.

-விளம்பரம்-

அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

சீரியலில் மனோஜ் பர்னிச்சர் கடைக்கு ஓனர் ஆகிறார். பின் வீட்டில் ரூம் ப்ரச்சனை வருகிறது. இதற்கு அண்ணாமலை முடிவு கட்ட நினைக்கிறார். கடந்த வாரம் ரோகினியின் மகன் கிரஷுக்கு கண்ணில் ஆபரேஷன் செய்து ஹாஸ்பிடலில் இருந்தார். இது ரோகினிக்கு தெரிந்தவுடன் அவர் பதறிப்போய் ஹாஸ்பிடல் சென்றார். அந்த சமயம் பார்த்து ஹாஸ்பிடலுக்கு வந்த முத்து- மீனா அவர்களை சந்தித்து நடந்ததை தெரிந்து கொண்டு அவர்கள் தங்களுடைய வீட்டிற்கு கிருசை அழைத்து வந்து வந்தார்கள்.

சீரியல் கதை:

வழக்கம்போல் விஜயா வீட்டில் இருக்கக் கூடாது என்று திட்டுகிறார். பின் மீனா, கிருஷுக்கு தேவையான எல்லா வேலைகளையும் செய்தார். இதை பார்த்து ரோகினி கோபம் அடைந்து கிருஷ்-மீனாவை பிரிக்க வேண்டும் என்ற திட்டம் போட்டு குடும்பத்தில் உள்ள எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டார். ஒரு வழியாக கிருஷுக்கு தன் தாய் யார் என்பது தெரிந்து விட்டது. பின் கிரிஷ் கண்ணை திறக்கும் போது தன் அம்மா ரோஹினியை பார்த்து சந்தோசம் பட்டார். ஒரு வழியாக ரோகினி தப்பித்து விடுகிறார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

அதன் பின் வீட்டில் முத்துவின் நண்பர் தன்னுடைய அண்ணன் கல்யாணம் என்று பத்திரிக்கை வைக்க வருகிறார். அப்போது முத்து கிண்டலாக தன் கல்யாணத்தை பற்றி பேசி இருக்கிறார். இதைக் கேட்டு மீனா மனம் உடைந்து விடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று விஜயா மீனாவை கிண்டல் செய்கிறார். மீனா வீட்டில் இல்லை. தற்போது சீரியலில் மீனாவை காணவில்லை என்று முத்து- அண்ணாமலை பதறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், விஜயா- ரோகினி இருவருமே சந்தோஷப்பட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி விறுவிறுப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

நடிகர்கள் வாங்கும் சம்பளம்:

இப்படி இருக்கும் நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜயா- 8000

அண்ணாமலை- 8,000

முத்து- 12000

மீனா -12,000

மனோஜ்-6000

ரோகினி- 6000

ரவி- 5000

ஸ்ருதி- 5000

Advertisement