விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிட்டி, பிஏ இருவரும் ரோகினி இடம் பணத்தை பறிக்க திட்டம் போடுகிறார்கள். இந்த வாரம் முத்து, வக்கீலை பார்த்து நடந்த விஷயத்தை மீனா-முத்து இருவருமே அண்ணாமலையிடம் சொல்ல, அவர் விஜயாவிடம் பேச போனார். ஆனால், விஜயா முடியாது என்று மறுத்தார். பின் விஜயா, முத்து- மீனா வீட்டை விட்டு வெளியே போனால் நான் கேசை வாபஸ் வாங்குவேன் என்று சொன்னவுடன் அண்ணாமலை அதிர்ச்சியாகி வந்துவிட்டார். பின் வக்கீல், இது ரொம்ப கிரிட்டிகள் கேஸ். சீக்கிரம் பணத்தை ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார்.
அந்த சமயம் பார்த்து சீதாவை வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டில் சொன்னதால் மீனா அம்மா ரொம்ப வருத்தப்பட்டார். நேற்று எபிசோடில் வக்கில், 5 லட்ச ரூபாய் பணத்தை ரெடி பண்ண வேண்டும் என்று சொன்னதால் முத்து மும்முரமாக அலைந்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் மீனாவின் அம்மாவும் தன்னுடைய கரும்பு மெஷினை விற்க பார்த்தார். உடனே அதை முத்து தடுத்து விட்டார். இதையெல்லாம் வக்கீலிடம் கொடுத்து சத்யாவை காப்பாற்ற சொல்லி கெஞ்சுகிறார்கள் முத்து-மீனா.
சிறகடிக்க ஆசை:
பின் வக்கீல், விஜயாவை சந்தித்து பேசும்போது பணம் தருகிறோம் என்கிறார். முதலில் மறுத்த விஜயா, 2 லட்சம் வேண்டும் என்று சொன்னார். உடனே வக்கீல் ஒத்துக் கொண்டதால், கேசை வாபஸ் வாங்க விஜயா சம்மதித்தார். பின் இதைப் பற்றி வக்கீல் சொல்ல, முத்துவும் சந்தோஷத்தில் வீட்டில் எல்லோரிடம் சொன்னார். எல்லோரும் சந்தோசப்பட, ரோகினி மட்டும் வருத்தப்பட்டார். விஜயா எப்படி வாபஸ் வாங்கினார் என்று சந்தேகத்தில் ரோகினி இருந்தார்.
நேற்று எபிசோட்:
பின் முத்து, அம்மாவை வீட்டிற்கு வர சொல்லுங்கள் என்றார். ஆனால், அண்ணாமலை அமைதியாக இருந்தார். மேலும், கேஸ் வாபஸ் வாங்கின விஷயம் தெரிந்த மீனா அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டு இருந்தார். பின் வீட்டிற்கு சத்யா வந்ததால் முத்துவும் அவருக்கு ஆறுதலாக பேசி படித்து முன்னேற வேண்டும் என்று அறிவுரை எல்லாம் சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் இந்த விஷயம் அறிந்த சிட்டி, கோபப்பட்டு எப்படியாவது சத்யாவை மீண்டும் பிரச்சனையில் மாட்டி விட வேண்டும் என்று யோசித்தார்.
இன்றைய எபிசோட்:
பின் ரோகினி இடம் பணத்தை வாங்க சிட்டி போன் செய்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிட்டி, சீக்கிரம் பணம் வேண்டும் என்று கேட்க, ரோகினி எப்படியாவது ரெடி பண்ணி தருகிறேன் என்கிறார். பின், மீனா அம்மா குடும்பத்தினர் விஜயா இருக்கும் இடத்திற்கு வருகிறார்கள். அவர்களை பார்த்தவுடன் விஜயா பயங்கரமாக கோபப்படுகிறார். பின் மீனா வீட்டில் உள்ள எல்லோருமே அவரிடம் மன்னிப்பு கேட்டும், அவர் மனமே இறங்கவில்லை. சத்தியாவும் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், அவர் வழக்கம்போல் மீனா குடும்பத்தை ரொம்ப அசிங்கப்படுத்தி பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
கடைசியில் முத்து, விஜயாவை வீட்டிற்கு அழைத்தார். ஆனால், அவர் முடியாது என்று மறுத்தவுடன் தன்னுடைய அப்பா விவாகரத்து செய்ய இருப்பதாக சும்மா ஒரு பொய் சொல்கிறார். அதை நம்பி விஜயாவும் பயந்து வீட்டிற்கு வருகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே விஜயா வந்தது நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். பின் கேஸ் வாபஸ் வாங்கின விஷயம் குறித்து எல்லோரும் கேட்க, வக்கீல் சொன்னது நியாயம் என்று பட்டது. அதனால் தான் வாங்கினேன். ஆனால், எனக்கு மீனா,அவருடைய குடும்பத்தின் மீது இருக்கும் கோபம் தீரவில்லை என்று பேசி திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.