வழவழா கொழகொழான்னு இழக்காமல் முத்து பஞ்சாயத்தை முடித்த இயக்குனர் – இப்படி இருக்கனும் சீரியல்ன்னா.

0
123
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

-விளம்பரம்-

முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. கடந்த வாரம் சீரியலில் மனோஜ் பணத்தை ஏமாற்றி சென்ற ஜீவா இந்தியாவிற்கு மீண்டும் வருகிறார். பின் மனோஜிடம் ஜீவா வசமாக மாட்டிக் கொள்கிறார். அவர் மீது போலீசிலும் புகார் அளிக்கிறார். போலீசில் ஜீவா பணம் கொடுக்க முடியாது என்று மறுக்கிறார். ஜீவாவிடம் இருந்து பணத்தை மனோஜ்- ரோகினி வாங்கி விடுகிறார்கள். ஆனால், இந்த உண்மையை வீட்டில் மறைக்கிறார்கள். பின் மனோஜ் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை தன்னுடைய அப்பா தான் போட்டார் என்று ரோகினி மாற்றி சொல்லி விடுகிறார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

வீட்டில் உள்ள எல்லோருமே நம்புகிறார்கள். ஆனால், முத்து மட்டும் சந்தேகப்படுகிறார். பின் முத்து அரசியல்வாதி ஒருவருக்கு கார் பேசி வாங்கி கொடுக்கிறார். அப்போது மீனாவை பழிவாங்க சிட்டி நினைக்கிறார். கார் வாங்கியதற்காக அரசியல்வாதி பார்ட்டி வைக்கிறார். இருந்தும் முத்து சாப்பிடாமல் அவர்களுக்கு உதவி செய்துவிட்டு செல்கிறார். ஆனால், இதை பார்த்த சிட்டி, முத்து குடிப்பது போல வீடியோ எடிட் செய்து சோசியல் மீடியாவில் பதிவிடுகிறார். அந்த வீடியோவை மீனாவின் தம்பி சத்யா, வீட்டில் உள்ள எல்லோருக்கும் காண்பிக்கிறார். அதை பார்த்து மீனா அதிர்ச்சி ஆகிறார். இன்னொரு பக்கம் வீடியோ முழுவதுமே எல்லோருக்குமே கிடைக்கிறது.

சீரியல் கதை:

சுருதியின் அப்பா போலீசுக்கு போன் செய்து விபரத்தை சொல்கிறார். பின் முத்து கார் ஓட்டி கொண்டு வரும்போது போலீஸ் அவரை மடக்கி காரை எடுத்து செல்கிறார்கள். முத்து தன் மீது தவறு இல்லை என்று எவ்வளவோ போராடியும் போலீஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. வீட்டில் எல்லோருமே முத்துவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம்போல் ரோகினி, மனோஜ், விஜய் எல்லாரும் முத்துவை திட்டுகிறார்கள்.
மேலும், தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில், முத்து, மீனாவின் கையை பிடித்து நான் குடிக்கவில்லை என்று கெஞ்சுகிறார். தன் பக்கம் நியாயத்தை முத்து சொல்லியும் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கோபப்பட்ட அண்ணாமலை, முத்துவை அடித்து விடுகிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

பின் இன்றைய எபிசோட்டில், முத்துவை குடியிலிருந்து விடுபட வைக்க மீனா ஒரு பவுடரை கலந்து வைக்கிறார். அதை விஜயா குடித்து விடுகிறார். இதை அறிந்த விஜயா வழக்கம்போல் மீனாவை பயங்கரமாக திட்டுகிறார். ஆனால், முத்து இதை நினைத்து வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற முத்து தன் பக்கம் இருக்கும் நியாயத்தை கூறுகிறார். ஆனால், எந்த போலீஸ்மே அவர் சொல்வதை கேட்கவில்லை. முத்துவிடம் சாப்பாடு, டீ வாங்கு என்று சொல்லி வேலை வாங்குகிறார்கள்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் நாளைய எபிசோட்டில் முத்து பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்ல மீனா சிசிடிவி பதிவுகளை செக் பண்ணி பார்க்கிறார். அப்போது முத்து குடிக்கவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இதை செய்தது சிட்டி தான் என்று கண்டுபிடிக்கிறார். இனிவரும் நாட்களில் இந்த உண்மையை மீனா எப்படி வெளி உலகத்திற்கு சொல்லுவார்? முத்துவிற்கு நியாயம் கிடைக்குமா? முத்து மீது விழுந்த பழி நீங்குமா? என்ற விறுவிறுப்பான கட்டத்துடன் சீரியல் செய்து கொண்டிருக்கின்றது.

Advertisement