விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவிற்கு தெரிந்தவர்கள் விஜயாவை பற்றி கிண்டலாக பேசி இருந்தார்கள். இதை ஒட்டு கேட்ட விஜயா, மீனாவின் அம்மா வந்தவுடன் கேட்டு சண்டை வாங்கினார். மீனா அம்மாவும், நான் எதுவும் தவறாக பேசவில்லை என்று சொல்லி சமாளித்தார். இருந்தாலும் விஜயா, என்னால் இனி இங்க இருக்க முடியாது என்று வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்றார். அப்போது வந்த முத்து, எனக்கு இன்னும் இரண்டு நாட்கள் டைம் கொடுங்கள். நம்முடைய வீட்டிற்கு எப்படியாவது செல்லலாம். நான் என்னுடைய காரை விற்றாவது உங்களை வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்றார்.

மீனாவின் அம்மா நடந்து கொண்ட விதத்தால் முத்து, மீனாவின் மீது கோபப்பட்டார். மீனாவும் தன்னுடைய அம்மாவுக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். இதனால் மீனா- முத்து இடையே விரிசல் ஏற்படுகிறது. அதற்குப்பின் முத்து, எப்படியாவது வீட்டை மீட்க வேண்டும் என்று ரவியிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். பின் முத்து, ரவி இருவரும் சேர்ந்து மனோஜிடம் பணம் கேட்டார்கள். மனோஜ், அந்த வீட்டில் எனக்கு பங்கு இல்லாத போது நான் எதற்காக பணம் கொடுக்கணும். எனக்கு அந்த வீடு போனாலும் அதைப்பற்றி கவலையில்லை என்றெல்லாம் திமிராக பேசி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
அதனால் முத்து கோபப்பட்டு மனோஜை அடிக்க போனார். பின் ரவி அவரை தடுத்து அங்கிருந்து அழைத்து வந்து விட்டார். அதற்குப்பின் மீனா, சத்யாவிடம் தன்னுடைய வீட்டு விவகாரத்தை பற்றி சொல்லி புலம்பி கொண்டிருந்தார். இதை ரேகாவின் அப்பா கவனித்து விட்டார். பின் சத்யா, தன்னுடைய அக்கா பணம் கேட்கும் விஷயத்தைப் பற்றி ரேகாவின் அப்பாவிடம் சொல்லி உதவி கேட்டார். ரேகா அப்பா, என்னால் முடிந்த உதவி செய்கிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, தன்னுடைய 3 வண்டிகளையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறார். வண்டியை வாங்குபவர், மொத்த வண்டிக்குமே ஏழு லட்சம் தான் கொடுக்க முடியும் என்று சொல்கிறார். மீதி பணத்துக்கு என்ன செய்வது என்று புரியாமல் முத்து தவிக்கிறார். இன்னொரு பக்கம் மீனா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார். மீனாவுடன் வேலை செய்பவர்கள் எல்லோருமே வேண்டாம் என்று தடுக்கிறார்கள். ஆனால், மீனா கேட்கவில்லை.

சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து முத்து அந்த இடத்திற்கு வந்து விடுகிறார். மீனாவை திட்டி ராஜினாமா செய்ய வேண்டாம் என்று சொல்கிறார். ஸ்வேதாவும் மக்களின் நிலைமையை எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். அதனால் மீனா தன்னுடைய ராஜினாமாயும் செய்ய முடிவிலிருந்து பின்வாங்கிக் கொள்கிறார். அதன் பின் சுருதி-ரவி இருவரும் முத்துவிற்கு உதவ லோன் போடுகிறார்கள். அதற்குப்பின் பார்வதி வீட்டிற்கு சென்ற விஜயா, இப்ப இருக்கும் பெண்கள் எல்லாம் ரொம்ப உஷாராக இருக்கிறார்கள். நானும் வேலைக்கு போகலாம் என்று இருக்கிறேன்.யாரை நம்பியும் நான் இனி இருக்க மாட்டேன் என்று சொல்கிறார்.






