விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் ரவி, தான் வேலை செய்யும் இடத்தில் திருமணம் ஆன ஜோடிகளுக்கு போட்டி நடப்பதாக சொல்லி இருந்தார். எல்லா ஜோடிகளும் போட்டியில் கலந்து இருந்தார்கள். ஒவ்வொருவருமே தங்களைப் பற்றி அறிமுகம் செய்து இருந்தார்கள். பின் ஒவ்வொரு பெண்களும் தங்களுடைய தனித்திறமையை காண்பித்தார்கள். அதற்குப் பின் ஒவ்வொரு ஜோடியையும் மேடையில் அமர வைத்து தங்கள் மனதில் தோன்றும் விஷயத்தை பேச சொன்னார்கள். அப்போது மீனா- முத்து பேசியதை கேட்டு அரங்கமே கைதட்டி இருந்தது.
அதற்குப் பின் ஒவ்வொருவரின் சம்பளத்தை பற்றி கேட்க மனோஜ் திமிராக பேசி இருந்தார். சுருதி-ரவி, முத்து- மீனா இருவருமே தங்களுடைய சம்பளத்தையும், அதற்கு செலவு செய்யும் விதத்தையும் பற்றி கூறியதைக் கேட்டு நடுவர்களே கிளாப் செய்திருந்தார்கள். மூன்றாவது சுற்றில், சந்தோசமாக வாழ்வதற்கு என்ன தேவை என்ற சொன்னவுடன் ஒவ்வொரு ஜோடியும் தனித்தனியாக டிஸ்கஸ் செய்தார்கள். அப்போது மனோஜ் வழக்கம் போல் குருட்டுத்தனமாக யோசித்து ரோகினி இடம் சொல்வதை நடுவர்கள் கேட்டு இருந்தார்கள். இறுதியில் வெற்றியாளர் குறித்து சொல்லும் போது, மனோஜ் ஆணவமாக பேசி இருந்த ஃபுட்டேஜை நடுவர்கள் போட்டு காண்பித்தவுடன் அவருக்கு முகமே இல்லை.
சிறகடிக்க ஆசை:
கடைசியில் மீனா- முத்து தான் வெற்றி பெற்றார்கள் என்று அறிவித்தார்கள். பின் முத்து- மீனா மாலையும், மேல தாளத்துடன் வந்தவுடன் விஜயாவிற்கு முகமே மாறிவிட்டது. பின் தாங்கள் வெற்றி பெற்ற பணத்தை அப்பாவிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கி அங்கு நடந்ததை சொல்லி இருந்தார் முத்து. ஒவ்வொரு ஜோடியும் போட்டியில் நடந்ததை பற்றி பேசி இருந்தார்கள். மறுநாள் மேஸ்திரியை கூட்டிட்டு வந்து எவ்வளவு பணமாகும் என்று முத்து கேட்க, 4 லட்சம் ஆகும் என்று சொன்னவுடன் இருவரின் முகமும் மாறிவிட்டது.
சீரியல் கதை:
நேற்று எபிசோடில் மனோஜ் தன்னுடைய அம்மாவிற்கு காஸ்ட்லியான புடவை, மனைவிக்கு தங்க தாலி கொடி, தனக்கு 51,000 ரூபாயில் வாட்ச் என்று வாங்கி இருந்தார். பின் தன் அப்பாவுக்கு ஒரு துண்டைக் கொண்டு வந்து கொடுக்க, முத்து கோபப்பட்டு மனோஜ் இடம் சண்டை போட்டு திட்டி இருந்தார். இன்னொரு பக்கம் முத்து, ஒரு நபரை சவாரிக்கு அழைத்து சென்று இருந்தார். அந்த நபருடைய வீட்டில் சிட்டியும் சத்யாவும் பணம் கேட்டு தொந்தரவு செய்திருந்தார்கள். அந்த நபரும் பதட்டதுடன் வீட்டுக்கு போய், நான் வட்டி சரியாக தானே கட்டுகிறேன். ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? என்று கேட்க, சிட்டி மோசமாக நடந்திருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதை பார்த்த முத்து, மொபைலில் ரெக்கார்ட் செய்து சிட்டியை மிரட்டுகிறார். பின் அங்கிருந்த சிலரை முத்து அடித்து, ஒழுங்கு மரியாதையாக அவர்களை தொந்தரவு செய்யாதே, அசலை மட்டும் கொடுப்பார்கள், வாங்கி கொள். இல்லையென்றால், போலீசில் புகார் கொடுப்பேன் என்று ஒரு பேப்பரில் எழுதி சிட்டி, சத்யாவிடம் கையெழுத்து வாங்கி விடுகிறார் முத்து. இதை எல்லாம் பார்த்து சிட்டிக்கு முத்து மேல் பயங்கர கோபம் வருகிறது. பின் அந்த நபர் முத்துவுக்கு நன்றி சொல்கிறார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், சத்யாவிற்கு பிறந்தநாள் என்பதால் கோவிலில் கூல் ஊத்துகிறார்கள். நான் போகட்டுமா என்று மீனா கேட்கிறார். உடனே முத்து, என்னை அழைக்காத இடத்திற்கு நீ போகாதே, நீ போகவே கூடாது என்று சொல்லி சென்று விடுகிறார். பின் சத்யா போன் செய்து, நீ வரவில்லை என்றால் நான் இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை என்று சொல்ல, மீனா வருத்தத்தில் இருக்கிறார். அந்த சமயம் பார்த்து சுருதி, நீங்கள் என்ன முத்துவுக்கு அடிமையா? உங்களுக்கு தோன்றியதை செய்யுங்கள், கோயிலுக்கு போங்க என்று சொல்லி மீனாவை உஸ் பேத்தி அனுப்பி விடுகிறார். இதை எல்லாம் பார்த்த விஜயா, முத்துவிடம் ஏத்தி விட, அவர் கோவிலில் போய் நிற்கிறார். மீனா எதுவும் பேசாமல் அதிர்ச்சியாகி இருக்கிறார்.