விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் ரவி, தான் வேலை செய்யும் இடத்தில் திருமணம் ஆன ஜோடிகளுக்கு போட்டி நடப்பதாக சொல்ல, எல்லா ஜோடிகளும் போட்டியில் கலந்து இருந்தார்கள். ஒவ்வொருவருமே தங்களைப் பற்றி அறிமுகம் செய்து இருந்தார்கள். பின் ஒவ்வொரு பெண்களும் தங்களுடைய தனித்திறமையை காண்பித்தார்கள். அப்போது மீனா- முத்து பேசியதை கேட்டு அரங்கமே கைதட்டி இருந்தது. இறுதி சுற்றில், மனோஜின் முட்டாள் தனத்தால் நடுவர்களிடம் அசிங்கம் பட்டார். கடைசியில் மீனா- முத்து தான் வெற்றி பெற்றார்கள் என்று அறிவித்தார்கள்.
அதன் பின் முத்து- மீனா மாலை, மேல தாளத்துடன் வந்தவுடன் விஜயாவிற்கு முகமே மாறிவிட்டது. மறுநாள் மனோஜ், பேங்கில் வந்த கிரிடிட் கார்ட் பணத்தை வைத்து தன்னுடைய அம்மாவிற்கு காஸ்ட்லியான புடவை, மனைவிக்கு தங்க தாலி கொடி, தனக்கு 51,000 ரூபாயில் வாட்ச் என்று வாங்கி இருந்தார். ஆனால், தன் அப்பாவுக்கு ஒரு துண்டைக் கொண்டு வந்து கொடுத்தார். பின் முத்து, ஒரு நபரை சவாரிக்கு அழைத்து சென்ற இடத்தில் அந்த நபருடைய வீட்டில் சிட்டியும், சத்யாவும் பணம் கேட்டு தொந்தரவு செய்திருந்தார்கள். இதை எல்லாம் பார்த்த முத்து, மொபைலில் ரெக்கார்ட் செய்து சிட்டியை மிரட்டி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
வேறு வழி இல்லாமல் முத்து சொன்ன மாதிரி சிட்டி கையெழுத்து போட்டு இருந்தார். பின் அந்த நபர் முத்துவுக்கு நன்றி சொல்கிறார். இந்த வாரம், சத்யாவிற்கு பிறந்தநாள் என்பதால் அவருடைய கோவிலில் கூல் ஊத்த இருப்பதாக மீனாவிடம் சொன்னார்கள். ஆனால், உன்னுடைய புருஷன் வரக்கூடாது என்று சத்யா சொன்னவுடன் மீனா கோபப்பட்டு பேசி இருந்தார். மீனாவும் இதை வீட்டில் எப்படி சொல்வது என்று சொல்லாமல் தயங்கி முத்துவிடம் பேச, முத்து கண்டுபிடித்து விடுகிறார். உன் தம்பி என்னை வர வேணாம் என்று சொல்லி இருக்கிறான்.
சீரியல் கதை:
இதனால் நீ போகவே கூடாது என்று முத்து சொல்ல, மீனாவும் தன்னுடைய அம்மாவிடம் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டார். பின் மீனா தன் குடும்பத்துக்காக போய் இருந்தார். இதையெல்லாம் விஜயா பார்த்து முத்துவிடம் பத்த வைத்தார். இன்னொரு பக்கம், மீனா கோயிலுக்கு வந்ததை பார்த்து அவருடைய குடும்பம் ரொம்ப சந்தோஷப்பட்டு கூல் ஊத்தும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள். நேற்று எபிசோடில், முத்துவும் கோயிலுக்கு போனார். அங்கு முத்துவை பார்த்த மீனா, அதிர்ச்சியாகி நிற்க, முத்துவும் எதுவும் பேசாமல் வீட்டிற்கு வந்து விட்டார்.
நேற்று எபிசோட்:
கடைசியில் முத்து, குடித்து விட்டு வந்து மீனாவிடம் சண்டை போட்டார். இதை பார்த்து விஜயா சந்தோசப்படுகிறார். பின் போதை தெளிந்து முத்து வேலைக்கு அவசர அவசரமாக கிளம்புகிறார். ஆனால், மீனாவிடம் பேசாமல் கோபப்பட்டு சென்று விட்டார். பின் முத்து வேலை செய்யும் இடத்திற்கு மீனாவின் அம்மா, தங்கை இருவருமே வந்து பேசுகிறார்கள். அப்போது முத்து, மீனா செய்ததை தப்பு போல் பேசுகிறார். ஆனால், மீனா தரப்பு நியாயத்தை அவர்கள் இருவரும் பேச முத்து ஏற்று கொள்ளாமல் கோபமாக அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், கடையில் ஸ்கூலில் அட்மிஷன் போடுவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய எபிசோட்:
ரோகினியும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ், எங்களுக்கு இன்னும் குழந்தை இல்லை. குழந்தை பிறந்த பிறகு அட்மிஷன் போடுகிறோம் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார். பின் குழந்தை பிறப்பதற்கு சாமியாரை பார்க்கலாம் என்று மனோஜ் சொல்ல, ரோகினிக்கு கோபம் வந்து டாக்டரை தான் பார்க்க வேண்டும் என்று மீண்டும் சொல்கிறார். இன்னொரு பக்கம் முத்து சவாரியில் ஒருவரை ஏற்றிக் கொண்டு செல்கிறார். அவர், என் வீட்டுக்காரருக்கும் அண்ணனுக்கும் பல வருட பகை. முடியாத நிலைமையிலும் பார்க்க கூடாது என்றால் எப்படி முடியும்? என்றவுடன் முத்துவுக்கு மீனாவின் நிலைமை புரிகிறது. பின் மீனாவிடம் பேசுகிறார் முத்து. இத்துடன் சீரியல் முடிகிறது.