விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ‘சிறகடிக்க ஆசை’ ஒன்று. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் டிஆர்பியில் முன்னிலையில் இருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. சீரியலில் மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று ஏமாந்து விட்டார். இதனால் விஜயா, மீனாவின் நகையை கொடுத்தார். ஆனால், மனோஜ் அடமானம் வைக்காமல் விற்று விட்டார்.
இன்னொரு பக்கம் வீட்டில் முத்து பாட்டிக்கு கிப்ட் வாங்க மீனா நகையை வாங்கி கடைக்கு சென்று இருந்தார். ஆனால், அது எல்லாம் கவரிங் என்று தெரிந்தது. பாட்டி பிறந்தநாள் முடிந்தவுடன் கவரிங் நகை விஷயத்தை அண்ணாமலை இடம் முத்து சொன்னார். அண்ணாமலை அதிர்ச்சியாகி விஜயாவிடம் கேட்டவுடன், எனக்கு தெரியாது. மீனா வீட்டில் தான் நகை மாறி இருக்கும். அவருடைய தம்பி தான் இந்த வேலையை செய்திருப்பான் என்று சொன்னார். இதனால் கோபப்பட்டு மீனா பேசி இருந்தார். இறுதியில் முத்து, இந்த வேலையை யார் செய்தது என்று எனக்கு தெரியும். ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன் என்கிறார்.
முத்து போட்ட குறும்படம்:
மேலும், செல்வம்- முத்து இருவரும் பிரிட்ஜ் வாங்க ஒரு கடைக்கு சென்றார்கள். ஆனால், அந்த கடையில் இருந்தவர்கள் மனோஜ் இடம் பிரிட்ஜை ஏமாற்றி வாங்கிய கும்பல் . இந்த கும்பல் செய்த திருட்டு வேலையை அறிந்த போலீசார் எல்லோரையும் கைது செய்தது. அப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மனோஜ் நடந்ததைப் பற்றி போலீஸ் இடம் சொல்வதை மறைந்து நின்று வீடியோ எடுத்த முத்து வீட்டில் காண்பிக்கிறார். இதை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி விஜயா, ரோகினி நிற்கிறார்கள். ஆனால், மனோஜை அடித்து அந்த நேரத்தில் காப்பாற்றி விடுகிறார் விஜயா.
முத்து போட்ட புது பிளான்:
கடைசியில் மனோஜ், ரோகினி இடம் மீனாவின் நகையை அடகு வைத்து தான் அந்த பணத்தை கொடுத்தேன் என்று உண்மையை உளறி விடுகிறார். நேற்று எபிசோடில், எப்படியாவது மனோஜ் வாயில் உண்மையை வர வைக்க வேண்டும் என்று முத்து, ஒரு சாமியாரிடம் மந்திரித்து வாங்கி வந்த எலுமிச்சை பழம் என்று பொய் சொல்லி, அந்த நகையை யார் மாற்றி வைத்தார்களோ அவர்களுக்கு வாய் கோணி விடும் என்று சாமி அறையில் வைக்கிறார். இதனால் மனோஜ், விஜயா இருவருமே பயந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ரோகினி சமாதானம் சொல்கிறார்.
நேற்று எபிசோட்:
இரவு முழுவதும் தூங்காமல் மனோஜ் சுற்றிக் கொண்டே இருக்கிறார். இன்னொரு பக்கம் விஜயாவும் பயந்து கொண்டிருக்கிறார். பின் இருவரும் காலையில் ஒரு சாமியாரை சந்தித்து பேசுகிறார்கள். அவர் கண்டிப்பாக நடக்கும், அது நடக்கக்கூடாது என்றால் இந்த எலுமிச்சம் பழத்தை அதற்கு எதிர்வினையில் வையுங்கள் என்று சொன்னார். இவர்களும் அதே போல் அந்த எலுமிச்சம் பழத்தை சாமி அறையில் வைத்தார்கள். ஆனால், இந்த எலுமிச்சம்பழம் உருண்டு ஓடி வந்துவிட்டது. மேலும், இரவில் தூங்கும் போது எலுமிச்சை பழத்தை நினைத்துக் கொண்டே இருக்கிறார் மனோஜ். அதற்கு ஏற்ப முத்துவும் தில்லாலங்கடி வேலையை செய்கிறார். இதனால் மனோஜ் பயந்து தன்னுடைய அம்மாவிடம் சொல்கிறார். அவர் உடனே அந்த எலுமிச்சம்பழத்தை தூக்கி வெளியே போடலாம் என்று சாமியறைக்கு செல்கிறார்கள்.
இன்றைய எபிசோட்:
அந்த சமயம் எல்லோருமே வந்து விடுகிறார்கள். எதற்கு எலுமிச்சம் பழத்தை எடுத்தீர்கள்? உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள் என்று முத்து மீனா- மாத்தி மாத்தி கேள்வி கேட்கிறார்கள். இருந்தாலுமே சமாளித்து ஒரு கட்டத்தில் ரோகினி, மனோஜை ரூமுக்கு அழைத்து செல்ல பார்க்கிறார். ஆனால், முத்து தடுத்து நிறுத்தி உண்மையை சொல்லியே ஆக வேண்டும் என்று கேட்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. நாளை எபிசோடில் அண்ணாமலை, மனோஜை மிரட்டி கேட்கிறார். அதற்கு விஜயா நான் தான் இந்த வீட்டில் இருப்பது யாருக்கும் பிடிக்கவில்லை என்று கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொள்கிறார். இனிவரும் நாட்களில் மனோஜ், தான் செய்த தவறை ஒத்து கொள்வாரா? விஜயா என்ன செய்ய காத்திருக்கிறார்? அண்ணாமலை எடுக்கும் முடிவு என்ன? போன்ற பரபரப்பான கட்டத்தில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது