மீனா போடும் சபதம், அதற்கு முத்து செய்த வேலை, ஷாக்கில் மீனா- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
131
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகினியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா.

-விளம்பரம்-

உண்மையில் அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. கடந்த வாரம் சீரியலில் ரோகினி மாமா என்று சொல்லிக் கொண்டு வந்த மலேசியா மாமாவை மீனா பார்த்து விடுகிறார். உடனே அவர் தப்பித்து செல்ல, மீனாவும் விடாமல் துரத்திக் கொண்டு போனார். கடைசியில் அவர் ரோகினியின் கடைக்குள் சென்று விடுகிறார். அவரை ஒரு பிரிட்ஜில் ரோகினி தோழி மறைத்து வைத்து விடுகிறார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

ஒரு வழியாக மலேசியா மாமா தப்பித்து விடுகிறார். இருந்தாலும், மீனா-முத்துக்கு சந்தேகம் வருகிறது. இது குறித்து இருவருமே பேசி கொண்டு இருப்பதை ஒட்டு கேட்ட ரோகினி வீட்டில் உள்ள எல்லோர் முன்பும் தன்னுடைய மலேசியா மாமாவுடன் போனில் பேசுகிறார். முத்துவும் போனை வாங்கி பேசுகிறார். ஆனாலும், முத்துவிற்கு சந்தேகம் அதிகம் ஆகிறது. மேலும், நேற்றைய எபிசோடில், ரூம் பிரச்சனை வந்ததால் வீடு கட்டுவது குறித்து அண்ணாமலை யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அண்ணாமலை எடுத்த முடிவு:

இதனால் அவர், அனைவரிடமும் மாதம் நீங்கள் எவ்வளவு காசு கொடுப்பீர்கள் என்று கேட்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகையை சொல்கிறார்கள். அதற்குப் பின் வீடு கட்டுவதற்கு குறித்து தன் நண்பரிடம் அண்ணாமலை பேசுகிறார். அவர் 5 லட்சம் ஆகும் என்று சொல்வதால் வீட்டு பத்திரத்தை அடகு வைக்கலாம் என்று அண்ணாமலை சொல்ல விஜயா முடியாது என்று மறுக்கிறார். இந்த விவகாரம் ஸ்ருதி அம்மாவிற்கு தெரிந்தவுடன் முத்து வீட்டிற்கு வந்து அவர் சகுனி வேலை செய்கிறார்.

-விளம்பரம்-

முத்து-மனோஜ் சண்டை:

இதனால் மனோஜ், முத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடி அளவிற்கு சண்டை ஏற்படுகிறது. பின் முத்துவை எல்லோருமே திட்டுகிறார்கள். இதனால் முத்து மன வேதனையில் குடித்து விடுகிறார். மேலும், இன்றைய எபிசோடில் சோகத்தில் இருக்கும் முத்து எல்லாத்தையும் புலம்பி பேசுகிறார். மீனா, அண்ணாமலை இருவருமே முத்துவின் நிலைமையை புரிந்து கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். மற்றவர்கள் வழக்கம் போல் முத்துவை திட்டுகிறார்கள். அடுத்த நாள் காலையில் முத்து குடித்து விட்டு வந்தது தவறு என்று சாமி அறையில் பூஜை செய்து கொண்டிருக்கிறார்.

நாளை எபிசோட்:

இதை பலருமே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். இந்நிலையில் நாளைய எபிசோட் ப்ரோமோவில், மீனா வீடு கட்டுவது தொடர்பாக சபதம் போடுகிறார். பின் முத்து, நீ சபதம் மேல் சபதம் அடுக்கிக் கொண்டு போகிறாய். நான் என்ன செய்யப் போகிறேன். உனக்காக ஒரு சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது வா என்று சொல்லி மீனாவை அழைத்து கார் டிக்கியை ஓப்பன் செய்கிறார். அதை பார்த்தவுடன் மீனா சந்தோஷப்படுகிறார். ஆனால், அதற்குள் இருந்தது என்னவென்று தெரியவில்லை. இனி வரும் நாட்களில் மீனாவின் சபதத்தை முத்து வெல்வாரா? வீட்டில் ரூம் பிரச்சனை முடியுமா? ரோகினியின் உண்மை முகம் தெரிய வருமா? போன்ற விறுவிறுப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது

Advertisement