சத்யாவை அடித்து வெளுத்து வாங்கிய விஜயா, அசிங்கப்பட்ட மீனா குடும்பம்- சிறகடிக்க ஆசை

0
213
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, யாருக்கும் தெரியாமல் முத்துவின் போனை எடுத்து விட்டார். ஆனால், போனை காணவில்லை என்று வீடு முழுக்க முத்து-மீனா இருவருமே தேடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து ரோகினி மனதுக்குள் சந்தோஷப்பட்டார். பின் பங்க்ஷன் நடந்த இடத்திற்கு சென்று மண்டபம் முழுவதுமே முத்து மொபைலை தேடி பார்த்தார். ஆனால், கிடைக்கவே இல்லை. இன்னொரு பக்கம் ரோகினி, சிட்டியை பார்த்து சத்யா வீடியோவை கொடுத்தார்.

-விளம்பரம்-

அப்போது அவர் பிஏவை கடத்தி அடைத்து வைத்திருக்கும் விஷயத்தை சொல்ல, ரோகினியும் சந்தோஷப்பட்டார். சத்யா வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிட தன்னுடைய பீகார் நண்பர் ஒருவர் மூலம் திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் மொபைலை காணவில்லை என்ற வருத்தத்தில் முத்து வீட்டிற்கு வந்தார். இதைக் கேட்ட விஜயா, வழக்கம் போல முத்து-மீனவையும் திட்டி பேசி இருந்தார். ஆனால் முத்து, மொபைலில் இருந்த வீடியோவை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு வேலைக்கு கிளம்பிவிட்டார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

அதன் பின் விஜயா மேல் பல்லி விழந்தது. அதை மீனா தட்டி விட அது மனோஜின் முகத்தில் ஒட்டிக் கொண்டது. ஒரு வழியாக பல்லியை மனோஜ் துரத்தி விட்டார்கள். இருந்தாலுமே, பல்லி விழுந்த சகுனம் சரியில்லை என்று விஜயா புலம்பி இருந்தார். பின் மொபைலில் ரோகினி செக் பண்ணி பார்த்தார். அப்போது விஜயா- மனோஜ்- ரோகினி மூவருக்குமே நன்றாக இருக்கிறது. ஆனால், மீனாவிற்கு தான் துன்பம் வரும் என்று போடப்பட்டிருக்கிறது. இதனால் மீனா வருத்தத்தில் இருந்தார்.

நேற்று எபிசோட்:

அதற்கு பின்பு தன்னுடைய தோழிகளிடம் நடந்ததை சொல்லி பேசிக் கொண்டிருந்தார் மீனா. உடனே அவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை கொடுத்து மொபைல் வாங்கி தர மீனாவிடம் சொன்னார்கள். அந்த சமயம் பார்த்து விஜயா வந்த ஆட்டோ நின்று விட்டது. அப்போது மீனாவின் தோழிகள் விஜயாவிடம் பேச, அவர் வழக்கம் போல் மீனாவை திட்டி பேசி இருந்தார். இதனால் அவர்கள் மீனாவிற்கு ஆதரவாக பேச, மீனாவின் தோழிகளை விஜயா அவமானப்படுத்தி கிளம்பி விட்டார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம், மீனாவிற்கு வேறொரு போனின் மூலம் முத்து போன் செய்து பேசி இருந்தார். அதற்குப்பின் மீனா, முத்துவிற்காக ஒரு புது போனை வாங்கி இருந்தார். இன்னொரு பக்கம் சிட்டி, தன்னுடைய நண்பர் ஒருவர் மூலம் சத்யாவுடைய வீடியோவை சோசியல் மீடியாவில் போட்டு விட்டார். இதை பார்த்த ரோகினி ரொம்ப சந்தோஷப்பட்டு விஜயாவிடம் காண்பித்தார். விஜயா, இது யார் என்று தெரிந்தால் செருப்பால் அடிப்பேன் என்று சொல்ல, அது சத்யா தான் என்று தெரிந்தவுடன் அவர் ரொம்ப ஷாக் ஆகி கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் சத்யா தான் தன்னுடைய பணத்தை திருடினான் என்று தெரிந்தவுடன் விஜயா கொந்தளித்து ரோகினி உடன் மீனா வீட்டிற்கு சென்று இருந்தார். பின் சத்யாவை சரமாரியாக அடித்து வெளுத்து வாங்கினார். மீனாவிற்கும் அவருடைய அம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. கடைசியில் விஜயாவை தடுத்து நிறுத்தி மீனா கேட்டதற்கு, சத்யா வீடியோவை காண்பித்துடன் அவர் அதிர்ச்சியில் எதுவுமே பேசாமல் அமைதியாகி விடுகிறார் . பின் விஜயா ரொம்ப கேவலமாக மீனாவையும் அவருடைய குடும்பத்தையும் பேசி, இனிமேல் வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். என்ன செய்வது என்று புரியாமல் மீனா குடும்பம் தவித்து நிற்கிறது.

Advertisement