விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் ஷோரூமில் வியாபாரம் ஆகவில்லை என்று தன் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். அதற்கு அவருடைய நண்பர், ரோகினி தான் உன்னுடைய லக்கி சாம். அவரால் தான் உன் வாழ்க்கை மாறியது என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வந்த ரோகினி, மனோஜிடம் மன்னிப்பு கேட்டு பேசி இருந்தார். மனோஜ், என் அம்மா பார்த்தால் பிரச்சினையாகிவிடும். இங்கிருந்து கிளம்பு என்று சொன்னார். ரோகினி எவ்வளவு சொல்லியுமே மனோஜ் ஏற்றுக்கொள்ளவில்லை. அழுது கொண்டே ரோகினி கிளம்பிவிட்டார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது போன் செய்த சீதா, சத்யாவை காணவில்லை, தேர்வு இருக்கிறது என்று ரொம்ப பதட்டமாக பேசினார். இதைக் கேட்டவுடன் முத்து ஷாக் ஆகிறார். பின் முத்து மீனாவிடம் எதுவும் சொல்லாமல் சத்யாவை தேடி தன்னுடைய நண்பருடன் சென்று விட்டார். சத்யா போகும் இடங்களுக்கெல்லாம் சென்று விசாரித்தார். ஆனால், யாருமே சத்யா வரவில்லை என்று சொன்னார்கள். அப்போது அங்கு வந்த மீனா, சத்யாவை பற்றி கேட்டார். முத்து உண்மையை சொல்கிறார். இதனால் மீனா ரொம்பவே பயந்து விட்டார். அதற்குப்பின் சிசிடிவி கேமராவில் சத்யாவை சிட்டி கடத்தி சென்றிருப்பதை பார்த்து விட்டார்கள்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோடில் சிட்டி தான் சத்யாவை கடத்தி இருக்கிறார் என்று தெரிந்தவுடன் முத்து எல்லா இடங்களில் தேடி அலைந்து கொண்டிருந்தார். மீனா தன்னுடைய அம்மாவிடம் உண்மையைச் சொல்லி விட்டார். அவர் வேதனையில் அழுது புலம்பி கொண்டிருந்தார். பின் சீதா, அருணுக்கு கால் செய்து சத்யாவை கடத்தின விஷயத்தை சொன்னவுடன் அவரும் ஆறுதல் சொன்னார். பின் தனக்கு தெரிந்த போலீஸ் மூலம் சத்யா இருக்கும் இடத்தை ட்ராக் செய்ய சொல்கிறார் அருண். பின் அதை சீதாவிற்கு அனுப்பி இருந்தார்.
நேற்று எபிசோட்:
சீதா உடனே முத்துவிற்கு லொகேஷனை அனுப்பி விட்டார். பின் முத்து, சத்யா இருக்கும் இடத்திற்கு சென்று வந்தார். அங்கு சிட்டி, சத்யாவை தேர்வு எழுத விடக்கூடாது என்று இன்ஜெக்ஷன் போட பார்த்தார். உடனே முத்து அந்த இடத்திற்கு சென்று சிட்டியையும் அவருடைய ஆட்களையும் அடித்து சத்யாவை காப்பாற்றி விட்டார். அதற்குப்பின் அருண் சொன்னதால் போலீஸ்மே அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள். சிட்டியும் அவருடைய கூட்டாளிகளையும் போலீஸ் கைது செய்து விட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சத்யாவை காப்பாத்தின விஷயத்தை முத்து போன் செய்து வீட்டிற்கு சொன்னவுடன் மீனா, அவருடைய அம்மாவும் சந்தோஷப்படுகிறார்கள். பின் சீதாவிற்கு போன் செய்த அருண், போலீஸ் போவதற்கு முன்பே உங்களுடைய மாமா சத்யாவை காப்பாற்றி விட்டார். ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சொல்கிறார். உடனே சீதா, நீங்கள் செய்த உதவியால் தான் இதை செய்ய முடியாது என்று நன்றி சொல்கிறார். இன்னொரு பக்கம் முத்து வீட்டில் விஜயாவிடம் ரோகினி தன்னுடைய சம்பளப் பணத்தை கொடுக்கிறார்.
சீரியல் ட்ராக்:
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த விஜயா பின் பணத்தை வாங்கி கொள்கிறார். உடனே அண்ணாமலை, பணத்தை வாங்குவது தவறு என்று சொல்கிறார். சுருதி, நாம் எல்லோரும் பேசினாலும் ரோகினி மாமியார் செய்வது சரியே என்று சொல்வார் என்கிறார். உடனே விஜயா, இவள் செய்த தவறுக்கு பைன் என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொள்கிறார். அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சீதாவிற்கு உதவி செய்தது யார்? அவரைப் பார்த்து நேரில் நன்றி சொல்ல வேண்டும் என்று பேசிக்கொள்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.