குடிக்கு ஆசை பட்டு அனைத்தையும் கொடுத்து 35 ஆயிரம் ரூபாயையும் இழந்த நடிகை.

0
21323
Priya-banarjee
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜன் மாதவ் இயக்கத்தில் விதார்த் மற்றும் ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான படம் ‘சித்திரம் பேசுதடி 2’. இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை பிரியா பானர்ஜி. இவர் கனடாவைச் சேர்ந்தவர். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கில் “கிஸ், அசுரா, ஐஸ்பா” உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் பாலிவுட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதோடு நடிகை பிரியா பானர்ஜி அவர்கள் பாலிவுட்டில் வலம் வருவதற்காக மும்பையிலேயே தங்கி உள்ளார். இவர் ஏற்கனவே மதுப்பழக்கத்திற்கு அடிமையாவர். இதனால் இவரை வைத்து பல ஆயிரம் ரூபாய் கணக்கில் மர்ம நபர் ஒருவர் ஏமாற்றி சென்று உள்ளார். ஆகவே போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த செய்தி குறித்து சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

-விளம்பரம்-
Image result for sithiram pesuthadi 2 priya banerji

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பு தான் நடிகை பிரியா பானர்ஜி அவர்கள் ஆன்லைன் மூலம் மது வாங்குவதற்காக ஆடல் செய்து உள்ளார். அப்போது அவரை போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் முதலில் நீங்கள் பணம் செலுத்துங்கள் அதற்கு பிறகு நான் மதுவை டெலிவிரி செய்கிறேன் என்று கூறி உள்ளார். அந்த நபரின் பேச்சை கேட்டு நடிகை பிரியா பானர்ஜி அவர்கள் தன்னிடம் இருந்த டெபிட் கார்டின் தகவல்கள் அனைத்தையும் கொடுத்து உள்ளார். பின் மதுவிற்காக பல மணி நேரம் காத்திருந்த நடிகை பிரியா பானர்ஜி மொபைலுக்கு திடீரென்று ஒரு மெசேஜ் வருகிறது. அதில் அவருடைய அக்கவுண்டில் இருந்து 35,000 ரூபாய் பணம் எடுத்து உள்ளார் என்ற தகவல். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை பிரியா பானர்ஜி உடனடியாக அந்த நபருக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

இதையும் பாருங்க : குடிக்கு ஆசை பட்டு அனைத்தையும் கொடுத்து 35 ஆயிரம் ரூபாயையும் இழந்த நடிகை.

அந்த நபரும் எங்கோ தவறு நடந்து உள்ளது எனக்குத் தெரியவில்லை மேடம். நாங்கள் உங்கள் பணத்தை கூகுள் பேய் மூலமாக திருப்பிக் கொடுக்கிறோம் என்று நல்லவர் போல நாசுக்காக பேசி உள்ளார். பின் அந்த மர்ம நபர் நான் பணத்தை திருப்பிக் கொடுக்கிறேன் உங்களுடைய அக்கௌண்ட் தகவலை கொடுங்கள் என்று கேட்டு உள்ளார். அதையும் நம்பி நடிகை பிரியா பானர்ஜி அவர்கள் G- PAY தகவலை கொடுத்து உள்ளார். ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்பது போல இந்த தகவல் தெரிந்து கொண்டு அந்த மர்ம நபர் நடிகை பிரியா பானர்ஜி அக்கௌன்ட் இருந்து 20,000 ரூபாய் எடுத்து கொண்டார். பின் நடிகை பிரியா பானர்ஜி அவர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for sithiram pesuthadi 2

போலீசார் உடனடியாக பணம் பரிமாற்றம் நடந்த வங்கிக்கு போன் செய்து அந்த பணபரிமாற்ற சேவையை நிறுத்துங்கள் என்று கூறினார்கள். இதனால் தான் நடிகை பிரியா பானர்ஜியின் பணம் தப்பித்தது. மேலும், யார் அந்த நபர்?? என போலீசார் தீவிரமாக செயல்பட்டு தேடி வருகின்றனர். இந்த தீவிர தேடுதலை குடியுரிமை பிரச்சினையில் ஈடுபட்டு பல அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் மாணவர்களின் மீது போலீசார் காண்பித்தால் எவ்வளவு நல்லா?? இருக்கும் என சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement