சிவகார்த்திகேயன் தொடர்ந்து வழுக்கு, நீதிமன்றத்தின் முடிவு. SKவிற்கு பாதகமா? சாதகமா?

0
379
- Advertisement -

மிஸ்டர் லோக்கல் படம் தொடர்பாக சிவகார்த்திகேயன் மீது தொடரப்பட்ட வழக்குக்கு நீதிபதி கொடுத்திருக்கும் தீர்ப்பு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மாவீரன். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் அயலான். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம்
வெளியாகி இருக்கிறது. ஏலியன் கதையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மீது தொடரப்பட்ட வழக்கு குறித்த சர்ச்சை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல்.

- Advertisement -

மிஸ்டர் லோக்கல் படம்:

இந்த படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் ஓரளவிற்கு மக்கள் மத்தியில் ஓடியது. இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். இந்த படத்திற்காக ஞானவேல்ராஜா 15 கோடி ரூபாய் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் தருவதாக ஒப்பந்தம் செய்து இருந்தார். ஆனால், இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டு மீதி 4 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக சிவகார்த்திகேயன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதோடு 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை தனக்கு செலுத்துவதற்கும், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரித் துறையிடம் செலுத்துவதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடவேண்டும்.

சிவகார்த்திகேயன் மனு:

இந்த பணம் செலுத்தும் வரை ஞானவேல் ராஜா தயாரித்து வரும் படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்கில் வெளியிடு மற்றும் ஓடிடியில் வெளியிட ஆகியவற்றின் விநியோக உரிமையை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் சிவகார்திகேயன் கோரிக்கை இருந்தார். இதை அடுத்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 2003ஆம் ஆண்டு ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த படம் எடுக்க முடியாத நிலையில் மீண்டும் 2018ஆம் ஆண்டு புது ஒப்பந்தம் போடப்பட்டது.

-விளம்பரம்-

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மனு:

சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆனால், மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை எனக்கு பிடிக்கவில்லை. அந்த படத்தின் இயக்குனராக ராஜேஷ் தான் வேண்டும் என சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் தான் அந்த படம் தயாரிக்கப்பட்டது. அந்த படத்தால் எனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. வரிகளுடன் சேர்த்து மீதம் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என சிவகார்த்திகேயன் இரக்கமின்றி எனக்கு அழுத்தம் தருகிறார். மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில் இரண்டு கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், விநியோகிஸ்தர்கள் பிரச்சனையில் சிக்க வைத்து விட வேண்டாம் என சிவகார்த்திகேயன் கூறினார்.

நீதிபதி உத்தரவு:

தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் உண்மையை மறைத்து நடிகர் சிவகார்த்திகேயன் என் மீது மனு தாக்கல் செய்திருக்கிறார். இதனால் இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இப்படி இந்த வழக்கு சில ஆண்டுகளாக நிலுவையில் இருந்த போது சிவகார்த்திகேயனுக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே சமூகமாக பிரச்சனை தீர்ந்து டிடிஎஸ் தொகையும் வருமானவரித்துறையில் செலுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது நீதிபதி சிவகார்த்திகேயனுக்கு திரும்ப வழங்க வேண்டிய 12.60 லட்சத்தை வட்டியுடன் அவரது வங்கி கணக்கில் செலுத்தி வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் நீதிபதி சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டிருக்கிறார்.

Advertisement