10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கையில்லாமல் சாதித்த மாணவனின் கல்விக்கு கை கொடுத்து உதவும் சிவகார்த்திகேயன்

0
1357
- Advertisement -

மாற்றுத்திறனாளி மாணவர் சாதித்து காட்டியிருப்பதை அடுத்து சிவகார்த்திகேயன் அழைத்து பாராட்டி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி- அருள் மூர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு கிர்த்தி வர்மா என்ற மகன் இருக்கிறார். இவர் தன்னுடைய நான்கு வயதில் இருக்கும்போது வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

அப்போது எதிர்பாராத விதமாக வீட்டை ஒட்டி இருக்கும் மின் கம்பத்தில் சென்று கம்பியை பிடித்திருக்கிறார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியதால் தன்னுடைய இரண்டு கைகளையும் அவர் இழந்திருக்கிறார். இதனால் அவரின் தந்தை வேதனையில் வீட்டை விட்டு சென்று விட்டார். இதனை அடுத்த அவருடைய தாயார் தான் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தன்னுடைய மகனை வளர்த்து வருகிறார். மேலும், இவரின் தாயார் தன்னுடைய சொந்த ஊரான ஜீனூர் கிராமத்தில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கே வந்துவிட்டார்.

- Advertisement -

மாற்றுத்திறனாளி மாணவர் செய்த சாதனை:

அங்கு கூலி வேலை செய்து தன்னுடைய மகனை படிக்க வைத்து வருகிறார். இரண்டு கைகளும் கீர்த்தி வர்மாவிற்கு இல்லை என்றாலும் தன்னம்பிக்கையோடு எட்டாம் வகுப்பு வரை நன்றாக படித்து இருந்தார். படிப்பு மட்டும் இல்லாமல் ஓவியம் வரைதல், தன்னுடைய வேலைகளை தானே செய்வது போன்று பிற வேலைகளையும் அவர் செய்து இருந்தார். இந்த நிலையில் நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் கீர்த்தி வர்மா 437 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் போனில் சொன்னது:

இரண்டு கைகளும் இல்லாமல் தந்தை ஆதரவும் இல்லாமல் தன்னம்பிக்கை விடாமுயற்சியுடன் கீர்த்தி சாதித்து காட்டிருக்கும் சம்பவம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து பலருமே கீர்த்திக்கு பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் போனில் கீர்த்தி வர்மாவை தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறார். பின் அவர், உங்களுக்கு என்ன படிக்க வேண்டும் என்று ஆசையோ அதை தாராளமாக படியுங்கள். அதற்காக என்ன உதவி வேண்டுமானாலும் அதை நான் செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர், டான் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:

இதை அடுத்து இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பிரின்ஸ். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து இவர் அயலான், எஸ்கே 21 போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement