நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம் – சிவகார்திகேயன் அம்மா கொடுத்துள்ள அட்வைஸ். மாறிய வாழ்க்கை.

0
747
- Advertisement -

சிவகார்த்திகேயன் திருமணம் குறித்து அவருடைய தாய் கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். முதலில் இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் அவருடைய மாமன் மகள் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சின்னத்திரையில் வேலை செய்து கொண்டிருக்கும்போதே திருமணம் நடந்து விட்டது.

- Advertisement -

தற்போது இவர்களுக்கு ஆராதனா, குகன் தாஸ் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அடிக்கடி சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி, குழந்தைகளோடு எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் திருமணம் ஆனபோது சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி ஆர்த்தியுடன் சேர்ந்து கொடுத்த பேட்டி வீடியோ கிளிப்ஸ் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதில், நமக்கு இப்போது தான் 21, 22 வயது ஆகிறது. அப்படியே காதலித்து கல்யாணம் பண்ணலாம் என்று இருந்தோம். ஆனால், அதெல்லாம் நீ ஒன்னும் பண்ணிக் கிழிக்க வேண்டாம். உன்னுடைய மாமன் பொண்ணையே திருமணம் பண்ணிக்கோ என்று என் அம்மா சொல்லிவிட்டார் என்று நகைச்சுவையாக பேசி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

மாவீரன் படம்:

கடைசியாக சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். இந்த படத்தில் அதிதி சங்கர் நடித்து இருந்தார். அனைவரும் எதிர்பார்த்த மாவீரன் படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் அயலான். இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்:

இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Advertisement