விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட சீமா ராஜா பட துணை நடிகை.

0
143171
jothilakshmi
- Advertisement -

சினிமா நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவது ஒன்றும் புதுசு அல்ல வழக்கமான ஒன்று. அதுமட்டும் இல்லாமல் இரண்டு மாதத்திற்கு, மூன்று மாதத்திற்கு ஒரு முறை யாவது எதாவது ஒரு நடிகை இந்த விஷயத்தில் சிக்கி விடுகிறார். சமீபத்தில் தான் சீரியல் நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்வதற்காக நடிகை சங்கீதா மற்றும் சில நடிகைகளை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தற்போது சென்னை மற்றும் மதுரையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 23 வயதான பிரபல நடிகை ஜோதி லட்சுமியை உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து பார்க்கையில் சினிமா வினியோகஸ்தர் ஒருவர் விபச்சார வழக்கில் ஈடுபடுவதாகவும், அவர் நடிகை, துணை நடிகைகளை வைத்து இந்த தொழிலை செய்வதாகவும் தகவல் வந்துள்ளது. சென்னை ஆழ்வார் திருநகர் 1வது மெயின் ரோட்டில் உள்ள கோபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மோகன் ரெட்டி. இவர் சினிமா வினியோகஸ்தர் என்ற போர்வையில் விபச்சார ஏஜென்டாக இருந்து வருகிறார். நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்ததில் இவர் மீது 4 வழக்குகள் பதிவு ஆகி உள்ளது. ஆனாலும், இவர் போலீசிடம் தப்பாமல் எஸ்கேப் ஆகிக் கொண்டே இருந்தார்.

-விளம்பரம்-
Image result for சிவகார்த்திகேயன் பட நடிகை விபச்சார வழக்கு"

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் தான் சென்னை வளசரவாக்கத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 2 துணை நடிகைகள் கைது ஆனார்கள். மேலும்,அவர்களிடம் விசாரித்த போது மோகன் ரெட்டியோட வலது கை பாஸ்கர் என்று தெரிய வந்தது. இதனால் பாஸ்கரை பிடிக்க போலீசார் ஒரு திட்டம் போட்டார்கள். இதனைத்தொடர்ந்து போலீசார் தொழிலதிபர்கள் போல் மாறுவேடம் அணிந்து பாஸ்கரிடம் உல்லாசத்திற்காக நடிகைகள் வேண்டும் என்று கேட்டார்கள். உடனே பாஸ்கரும் 25000 ரூபாயை தந்துவிட்டு கோயம்பேடு பஸ் நிலையம் அருகே வந்து நில்லுங்கள் நாங்கள் நடிகைகளை அழைத்து வருகிறோம் என்று சொன்னார்.மேலும்,பாஸ்கரிடம் 25000 ரூபாயை தந்துவிட்டு கோயம்பேடு பஸ் நிலையம் அருகே போலீசார் காத்து இருந்தார்கள். அப்போது ஒரு காரிலிருந்து இரண்டு துணை நடிகைகளை அழைத்து கொண்டு வந்தார் மோகன் ரெட்டி.

இதையும் பாருங்க : நடிகை நீலிமா ராணியின் அழகிய குடும்பம். இவருக்கு இவ்வளவு பெரிய மகளா.

இதனையடுத்து போலீசார் மோகன் ரெட்டியை கைது செய்தனர். பின் பாஸ்கரையும் கைது செய்தார்கள். மேலும்,கைதான இந்த துணை நடிகைகள் யார் என்று பார்த்தால் பத்மா, ஜோதி. ஜோதி ஏற்கனவே சீமராஜா, தேவராட்டம், நாடோடிகள் 2 போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும், மோகன் ரெடிட்டியிடம் விசாரித்தபோது, அவர் கூறியது, பிரபல தெலுங்கு நடிகர் இடம் தான் முதலில் நான் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு இருந்து தான் சினிமா பிரமுகர்கள் நட்பு கிடைத்தது. பின் சென்னையில் டிராவல்ஸ் ஒன்று ஆரம்பித்து படிப்படியாக சினிமா வினியோகஸ்தர் தொழிலையும் செய்ய ஆரம்பித்தேன். இதற்கு எம்.எம்.ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தையும் தொடங்கினேன்.

-விளம்பரம்-

மேலும், கோவில், திருப்பதி, வாத்தியார், மாயாவி, ஜாம்பவான் போன்ற தமிழ் படங்களில் விநியோக உரிமையும் வாங்கி ஆந்திராவில் திரையிட்டு வந்தேன். மறைமுகமாக விபசாரத் தொழிலையும் செய்து தொடங்கினேன். இதனால் ஏராளமான நடிகைகள், துணை நடிகைகள் கூட்டணி வைத்துக் கொண்டேன் என்று கூறினார். இதனை தொடர்ந்து கைதான 2 துணை நடிகைகளை அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும்,மோகன் ரெட்டியும், பாஸ்கரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயில் சிறையில் அடைக்கப்பட்டன

Advertisement