தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் மிகப் பிரபலமான நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி சிங்கணம்புரி, சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் கல்லூரியில் படிக்கும் போது தன்னுடைய மெமிக்கிரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தார். இவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தான் தொகுப்பாளராக இருந்தவர். அதற்குப் பின்னர் தான் சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மெரினா’ படத்தில் கதாநாயகனாக தமிழ் திரையுலக வாழ்க்கையை துவங்கினார்.
இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், இவர் நடிப்பை தாண்டி படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வந்த முதல் படம் ‘கனா’. இந்த கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வேற லெவல்ல பிளாக் பஸ்டர் ஆக மாறியது என்று சொல்லலாம்.
இதையும் பாருங்க : சின்னத்தம்பி சீரியலுக்கு பின் பிரஜின் நடிக்கும் அடுத்த சீரியல். இந்த தேதியில் ஆரம்பம்.
இந்த படம் குடும்ப கதையை குறிப்பாக அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்திய படமாக இருந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வந்த படம் “ஹீரோ”. இந்த படம் தொடங்கியதிலிருந்தே பிரச்சனைகளில் சிக்கி வந்து கொண்டிருக்கின்றது. பாலிவுட் நடிகர் அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், ரோபோ சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தான் பிறந்த ஊரான சிங்கம்புணரிக்கு சென்று உள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்தார்.
தற்போது இவர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தனியார் மருத்துவமனைக்கு வந்து உள்ளார். அதுவும் அவர் மதுரை விமான நிலையத்திலிருந்து காரில் நேரடியாக மருத்துவமனைக்கு வந்தார் என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் பிறக்கும் போது தனது தாயாருக்கு பிரசவம் பார்த்த டாக்டர் சின்னையாவை சந்தித்து ஆசி பெற்றார் உள்ளார். அதனைத் தொடர்ந்து தனது தாயாரின் சொந்த ஊரான பிரான் மலைக்கு சென்று உள்ளார். குறிப்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் டாக்டர் சின்னையாவை சந்திக்கும் வகையில் ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்து சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஹீரோ படத்தை தொடர்ந்து சிவர்கார்த்திகேயன் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் டாக்டர். இந்த படைத்தை நெல்சன் இயக்கிய வருகிறார். மேலும், kidney திருடப்பட்டு மாற்றப்படுவது தான் இப்படத்தின் கதைக்களம் என்று சில தகவல்கள் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது.