நடிகர் சிவகார்த்திகேயன் தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும் தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார்.சின்னதிரையில் இருந்த போதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையே ல்லாம் பயன்படித்தினர் எப்படி கிடைத்த ஒரு வாய்ப்பு தான் தனுஷ் இவர்க்கு அளித்த 3 படம். ஆனால் அதற்கு முன்னாலே சிவா சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
அது தான் சிம்பு நடிக்கவிருந்த வேட்டை மன்னன் என்ற படம்.இயக்குனர் நெல்சன் இயக்கிய அந்த படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் சிவா. மேலும் அதில் ஜெய், மற்றும் சிம்புவுடன் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாராம் சிவா.மேலும் அந்த படத்தில் சிம்புவிற்கு அடுத்த காட்சிகளில் என்ன வசனம் பேச வேண்டும் என்ற பேப்பரை காட்டும் வேலையையும் செய்தாராம். ஆனால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த அந்த படம் இறுதியில் கைவிடப்பட்டது.
ஒரு வேலை அந்த படம் வெளியாகி இருந்தால்.அவர் சினிமாவில் தற்போது இருக்கும் இடத்தை இன்னும் குறுகிய காலகட்டத்திலேயே சுலபமாக அடைந்திருபாரோ என்னமோ.அதே போன்று சிவா தனுஷுடன் படத்தில் ஏற்கனவே நடித்துவிட்டார்.ஓரு வேலை வேட்டை மன்னன் படம் வெளியாகி இருந்தால் சிம்புவுடனும் நடித்த ஒரு பெருமை கிடைத்திருக்கும்.