சீனா தானா , கண்ட நாள் முதல் , அஞ்சாதே போன்ற படங்களில் நடித்த நடிகர் பிரசன்ன ஏஸ். ஜே . சூர்யாவின் நடிப்பை பார்த்து கேட்ட வார்த்தையில் திட்டினேன் என்று ஒரு பொது மேடையில் கூறி அனைவரயும் அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளார்.
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ,சினிமாவில் தனது பயணத்தை இயக்குனராக துவங்கிய இவர் பின்னர் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். மேலும் சமீபத்தில் இவர் நடித்த ஸ்பைடர் படத்தில் இவரது நடிப்பை பார்த்து அணைத்து ரசிகர்களும் இவர் இவர் நடிகராகவே இருந்தால் நன்றாக இருக்கும் என்று பாராட்டி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த தனியார் விருது வழங்கும் விழாவில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஸ்பைடர் படத்திற்காக சிறந்த வில்லன் நடிகர் என்ற விருது வழங்கப்பட்டது. மேலும் அதே விழாவில் ஸ்னேஹாவின் கணவரான நடிகர் பிரேசனாவிற்கு நடிகர் ராஜ்கிரண் ரேவதி நடித்த “பவர் பாண்டி ” என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் என்ற விருதும் வழங்கப்பட்டது .
விருதை பெற்றுக்கொண்ட பின் பேசிய பிரசன்னா” நான் ஏற்கனவேய அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்துள்ளேன் . அனால் , அந்த படத்திற்க்கு,அகா எனக்கு எந்த வருத்தும் வழங்கப்பட வில்லை . பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு திருட்டு பயலே 2 என்ற படத்தில் வில்லனாக நடித்தேன் . மேலும் அந்த படத்தில் எனக்கு வில்லன் விருது கிடைக்கும் என்று மிகவும் எதிர்பார்த்து கொண்டிருருந்தேன் .
ஆனால், ஸ்பைடர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடித்த இன்டெர்வல் பிளாக் கட்சியில் அவரின் நடிப்பை பார்த்து வியந்து அவரை கேட்ட வார்த்தையில் திட்டினேன் . மேலும் கண்டிப்பாக கண்டிப்பாக நமக்கு விருது இல்லை என்றும் உறுதி செய்துவிட்டேன்” என்று தெரிவித்திருந்தார் .