வைரல் சிறுவன் ‘Sofa Boy’க்கு சூப்பர் ஸ்டார் இயக்குனர் படத்தில் கிடைத்த வாய்ப்பு. அவரே சொன்ன விஷயம்.

0
383
- Advertisement -

பிரபலமான இயக்குனர்களின் படங்களில் சோபா பாய் முகமது ரசூல் கமிட்டாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நபர்தான் முகமது ரசூல். இவர் தன்னுடைய சோபா பிசினஸ் குறித்து செய்யும் ப்ரொமோட் வீடியோ ப்எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் என்று சொல்லலாம். இதனாலே இவரை பலரும் சோபா பாய் என்று தான் அழைக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இவர் தன் கடையின் விளம்பரத்திற்காக பேசும் விதமும் ஸ்டைலும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. இருந்தாலும் சிலர் இதை விமர்சித்தும் இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக முகமது ரசூல் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், என்னுடைய அப்பா ஆரம்பத்தில் சோபா, பெட் எல்லாம் கம்பெனிகளுக்கு சப்ளை செய்து கொண்டிருந்தார். ஆனால், அதில் பேமென்ட் எல்லாம் ஒழுங்கா வராது.

- Advertisement -

முகமது ரசூல் பேட்டி:

இதனால் அவர் கஷ்டப்பட்டு கொண்டே இருந்தார். பின் நான் அவருக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணனும் என்று நினைத்தேன். சும்மா ரிலீஸ் பார்த்துக் கொண்டிருக்கும்போது இதே மாதிரி ரீல்ஸ் பண்ணி அப்பாவுக்கு வருமானத்தை ஏற்படுத்தலாம் என்று முடிவு பண்ணினேன். முதலில் அப்பா தான் வீடியோ பேசினார். எதிர்பார்த்த அளவுக்கு அந்த வீடியோ போகவில்லை. அதற்கு பிறகு தான் நான் வீடியோ பேசினேன். 1500 ரூபாயில் சோபா என்று பேசினேன்.

பிரபலங்கள் பாராட்டு:

அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது. அதோடு என்னுடைய குரலும் மக்களுக்கு பிடித்து விட்டது. இந்த அளவுக்கு நான் வைரலாவேன் என்று எதிர் பார்க்கவில்லை. அது மட்டும் இல்லாமல் என்னை லைக் பண்ணி நிறைய பேர் ஷேர் பண்ணுகிறார்கள். நான் செய்து வெளியிடும் வீடியோக்களை பார்த்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் என்னை பாராட்டி இருந்தார். பின் அவர் என்னையும் என்னுடைய குடும்பத்தினரையும் மீட் பண்ணுவதாக சொல்லி இருக்கிறார்.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன் பட வாய்ப்பு:

அதே மாதிரி விஜே அர்ச்சனா அக்கா, நடிகர் சந்திப் கிஷன் எல்லோருமே போன் பண்ணி பாராட்டி இருந்தார்கள். மேலும், விக்னேஷ் சிவன் சார் ஃபோன் பண்ணி பாராட்டுனது மட்டும் இல்லாமல் எனக்கு நடிக்கவும் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். அவர் இயக்கி வரும் எல்ஐசி படத்தில் நான் நடிக்கிறேன். அவர் எவ்வளவு பெரிய இயக்குனர். ஆனால், அவர் என்னோட ரசிகர் என்று சொல்லும்போது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. அதே மாதிரி இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சாரோட படத்திலும் நான் நடிக்கிறேன்.

சினிமா குறித்து சொன்னது:

நான் விஜய் சாரோட தீவிர ரசிகன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடிப்பு, டான்ஸ், ஸ்டைல் எல்லாமே பிடிக்கும். அவர் மாதிரி யாருக்கும் ஸ்டைல் வராது. அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். நடிகைகளில் எனக்கு நயன்தாரா தான் ரொம்ப பிடிக்கும். எனக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் விருப்பம். சினிமாவிலேயே தொடர்ந்தேன் என்றால் விஜய் சார் மாதிரி ஹீரோ ஆகணும் என்று ஆசைப்படுகிறேன். கண்டிப்பாக ஒரு நாள் ஆகுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று பெருமிதமாக நெகிழ்ச்சியுடன் சோபா பாய் முகமது ரசூல் பேசி இருக்கும் வீடியோ தான் வைரலாகி வருகிறது.

Advertisement