என் சக்தி உங்களுக்கு தெரியாது – என் கோபத்தை சாதாரணமாக பார்க்கிறீர்களா ? – திடீர் சாமியார் அண்ணபூரணியின் முதல் பேட்டி

0
1153
ANNAPORNI
- Advertisement -

ஆதி பராசக்தியின் அவதாரம் என்று சொல்லிக்கொள்ளும் அன்னபூரணியை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது என இயக்குனரும் சமூக ஆர்வலருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக தமிழ்நாட்டில் போலி சாமியார்களுக்கு பஞ்சம் இல்லை. அந்த வகையில் தற்போது லேட்டஸ்டாக பெண் சாமியார் ஒருவர் புது அவதாரம் எடுத்துள்ள வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பயங்கர டிரன்டிங் ஆகி வருகிறது. அன்னபூரணி அரசு அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு வீடியோ வெளியிட்டு உள்ளார் அன்னபூரணி.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-228.jpg

திடீர் சாமியார் அண்ணபூரணி :

அந்த வீடியோவில் பொதுமக்கள் பக்தி பரவசத்தால் கத்திக்கொண்டும் பூஜை செய்யும் வீடியோக்கள் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, அன்னபூரணி சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். அந்த வீடியோக்களும் இதனுடன் இணைத்து வெளியிட்டு உள்ளார்கள்.

- Advertisement -

அண்ணப்பூரணி குறித்த லட்சுமி :

அதில் அன்னபூரணி திருமணமாகி குழந்தைகள் இருந்த ஒருவருடன் விவாகரத்து பெறாமல் சட்டவிரோதமாக குடும்பம் நடத்தி வந்ததாக அன்னபூரணி மீது புகார் எழுந்தது. ஆனால், தற்போது அன்னபூரணி திடீர் சாமியாராகி உள்ளார். இந்நிலையில் இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, அன்னபூரணி குறித்த வீடியோக்களை நான் பார்த்தேன்.

ஒரே சிரிப்பா இருக்கு :

எனக்கும் அந்த வீடியோவை அனுப்பி இருந்தார்கள். அந்த வீடியோவை எல்லாம் பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. ஆனால், மக்கள் இப்படி போலி சாமியார்களை கண்டு ஏமாந்து போகிறார்கள் என்பதை நினைத்து எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. மேலும், நான் அன்னபூரணியின் கடந்தகால தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, அவர் நடத்தை குறித்தோ எதையும் விவாதிக்க விரும்பவில்லை. அது அவருடைய தனிப்பட்ட விஷயம்.

-விளம்பரம்-

எத்தனை நாட்கள் ஏமாறுவதற்கு நாம் ரெடியாக இருக்கிறோமோ? :

ஆனால், இதுபோன்ற போலி சாமி என்று சொல்லிக்கொண்டு காலில் விழுவது தவறான விஷயம், முட்டாள்தனம். இந்த மாதிரி போலி சாமியார்களை சாமி என்று சொல்லி மக்கள் நம்புவது பரிதாபமாக இருக்கிறது. எத்தனை நாட்கள் ஏமாறுவதற்கு நாம் ரெடியாக இருக்கிறோமோ? அது வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள் என்று கூறி இருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக அன்னபூரணியின் வீடியோ தான் Meme மெட்டிரியளாக இருந்து வருகிறது.

அண்ணபூரணியின் பேட்டி :

இப்படி சமூக வலைத்தளத்தில் இவரை பலரும் கேலி செய்து வரும் நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பின்னர் முதன்முறையாக பேட்டி ஒன்றில் பங்கேற்று இருக்கிறது. அதில் பேசியுள்ள இவர் , தான் ஒரு சக்தி எனவும் இந்த உலகை இயக்கும் போதும் எனக்குள் இருக்கும் சக்தி தான் என்றும் கூறியிருக்கிறார். மேலும், பேசிக் கொண்டே இருக்கும்போது திடீரென்று கத்திய இவர் என்னுடைய கோபத்தை சாதாரணமாக பார்க்கிறீர்களா என்று ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார். இவரின் இந்த தற்போது வைரலாக பரவி வருகிறது இன்னும் என்னவெல்லாம் பேசியிருக்கிறார் என்பதை சிரிக்காமல் முழுவதுமாக பாருங்கள்.

Advertisement