சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த கெளரவம் – பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ்ப் படம்

0
204
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் படத்திற்கு தேசிய விருது கிடைக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷனில் தயாரித்திருக்கும் படம் ’கொட்டுக்காளி’. இந்த படத்தை பி எஸ் வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சூரி, அன்ன பென் உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக அரங்கில் ப்ரீமியர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

கொட்டுக்காளி படம்:

இது சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஆகும். இதனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கு பெருமை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த படம் 2024 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் மறக்க முடியாத ஒரு படமாக இருக்கும். இந்த படத்தை இயக்குனர் சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முயற்சித்து இருக்கிறார். அந்த வகையில் பிப்ரவரி 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருக்கிறது.

சிவகார்த்திகேயன் பேட்டி:

மேலும் இது குறித்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், நம்பிக்கை கூறிய திறமைசாலிகளை ஊக்குவிக்கவும் அவர்களின் கனவுகளை நினைவாக்கவும் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
அதிர்ஷ்டவசமாக என்னை சுற்றி தொழில் மீது ஆர்வம் கொண்ட திறமைசாலிகள் சரியாக அமைகிறார்கள். மொழி மற்றும் பிராந்திய தடைகளுக்கு அப்பால் அனைவரும் தொடர்பு படுத்த வேண்டிய மனித உரிமைகளை அங்கீகரிக்கும் தனித்துவமான கதைகளை உருவாக்க எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

படம் குறித்து சொன்னது:

இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான படைப்பை நாங்கள் தயாரித்ததில் பெருமைப்படுகிறோம். சர்வதேச திரைப்பட விழா என்பது உலக திரையரங்கில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இடம். வரயிருக்கும் ஆண்டுகளில் நாம் மறக்க முடியாத பெருமைமிகு நினைவாகவும் இது இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும், கடைசியாக சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் அயலான். இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் படம் நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Advertisement