எத்தனையோ தொலைக்காட்சிகள் இருந்தலும் குடும்ப ரசிகர்கள் பெரும்பாலும் பார்ப்பது சன் தொலைக்காட்சி தான். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களும் , நிகழ்கிகளும் குடும்ப ரசிகர்கள் பார்க்கும்படி இருந்தது.
ஆனால், சமீபத்தில் சன் குழுமம் நடத்தி வரும் புதிய தொலைக்காட்சியான சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘சொப்பன சுந்தரி’ என்ற புதிய நிகழ்ச்சியில் பெண்கள் அடிக்கும் கூத்துக்கள் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துவந்தது.
இதையும் பாருங்க : குளியலறையில் அரைகுறை அடையில் போட்டோ ஷூட்..!வரம்பை மீறும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி…!
இதுவரை இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான எபிசோடுகளில் போட்டியாளர் அனைவரும் அரைகுறை அடையில் போட்டோ ஷூட்களை நடித்தி வந்தனர். இதனால் இந்த நிகழ்ச்சி மீது பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஒரு வழியாக நிறைவடைந்துள்ளது.
சொப்பன சுந்தரியின் டைட்டில் வின்னராக டிம்பிள் என்பவர் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை பவித்ரா பிடித்தார். பவி என்பவர் மூன்றாம் இடம் பிடித்தார். நடிகை நிக்கி கல்ராணி வெற்றியாளர்கள் பெயரை அறிவித்தார்.