ரஜினி வீட்டில் விசேஷம், வாழ்த்தி மகிழ்ந்த நண்பர்கள், உறவினர்கள் – தனுஷ் மட்டும் மிஸ்ஸிங்.

0
623
rajini
- Advertisement -

-விளம்பரம்-

ரஜினி வீட்டில் விஷேசம் நடந்திருப்பதை அடுத்து நண்பர்கள், உறவினர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘அண்ணாத்த’ படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

- Advertisement -

இதனை தொடர்ந்து ரஜினி அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, ரஜினிகாந்த்க்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

இளைய மகள் சௌந்தர்யா :

சமீபத்தில் தான் ஐஸ்வர்யா-தனுஷ் பிரிய போவதாக அறிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் சினிமாவில் அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது, இயக்குவது என்று திகழ்கிறார். பின் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்தது. பின் சௌந்தர்யாவுக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

-விளம்பரம்-

முதல் கணவர் :

ஏற்கனேவே சௌந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்திருந்தனர். பின்னர் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். அதுக்கு பின் சௌந்தர்யா முழு கவனத்தையும் திரைப்படங்கள் இயக்குவதும், அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது போன்ற வேலைகளில் தீவிரம் செலுத்தி வந்திருந்தார். இந்த சமயத்தில் சௌந்தர்யா வணங்காமுடி மகன் விசாகன் ஆகிய இருவரும் காதலித்து வந்தார்கள்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் கர்ப்பம் :

இதை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் படு கோலாகலமாக நடைபெற்றது. மேலும், இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் சௌந்தர்யா கர்ப்பமானார். இந்த நிலையில் கடந்த வாரம் சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து இருக்கிறது.

இந்த நிகழ்ச்சி சௌந்தர்யாவின் கணவர் விசாகன் வீட்டில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி மற்றும் விசாகனின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர், நெருங்கிய சில உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர். மேலும், அக்டோபர் மாதம் சௌந்தர்யாவுக்கு குழந்தை பிறக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இதனால் ரஜினி குடும்பமே மகிழ்ச்சியில் இருக்கிறது.

Advertisement