ரஜினியின் இரண்டாம் மகளின் முதல் கணவருக்கு பிறந்த மகனா இது – இப்போ எப்படி வளந்துட்டார் பாருங்க.

0
804
Soundarya
- Advertisement -

சௌந்தர்யா ரஜினியின் மகன் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் தான். உலகம் முழுவதும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படை உள்ளது. கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘அண்ணாத்த’ படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து ரஜினி அவர்கள் தலைவர் 169 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது டபுள் ட்ரீட் என்பது போல் நெல்சனும், ரஜினிகாந்தும் இணைந்து படம் பண்ணுகிறார்கள். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. மேலும், நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-அனிரூத் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இது ஒரு பக்கம் இருக்க, ரஜினிகாந்த்க்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

- Advertisement -

சௌந்தர்யாவின் முதல் திருமணம்:

சமீபத்தில் தான் ஐஸ்வர்யா-தனுஷ் பிரிய போவதாக அறிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் சினிமாவில் அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது, இயக்குனராக திகழ்கிறார். பின் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து சௌந்தர்யா முழு மாத கர்ப்பிணியாக இருந்தார். பின் சவுந்தர்யா தன்னுடைய மகனைப் பெற்றெடுப்பதற்காக அம்மா வீட்டுக்கு வந்திருந்தார்.

சௌந்தர்யாவின் விவாகரத்து:

சில நாட்களிலில் சௌந்தர்யாவுக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு வேத் என்று பெயர் வைத்தார்கள். ஏற்கனேவே சௌந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. பின் இதன் காரணமாக சௌந்தர்யா பெற்றோர் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விட்டார். பிறகு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்திருந்தனர். பின்னர் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். அதுக்கு பின் சௌந்தர்யா தன்னுடைய மகன் வேத்துடன் ரஜினிகாந்த் வீட்டில் தான் வசித்து வந்தார்.

-விளம்பரம்-

சௌந்தர்யா-விசாகன் திருமணம்:

மேலும், சௌந்தர்யா விவாகரத்துக்கு பின் முழு கவனத்தையும் திரைப்படங்கள் இயக்குவதும், அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது போன்ற வேலைகளில் தீவிரம் செலுத்தி வந்திருந்தார். இந்த சமயத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த்,தொழிலதிபர் வணங்காமுடி மகன் விசாகன் ஆகிய இருவரும் காதலித்து வந்தார்கள். மேலும், இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தார்கள். இதை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் படு கோலாகலமாக நடைபெற்றது.

சௌந்தர்யா மகன் புகைப்படம்:

மேலும், சௌந்தர்யா தன்னுடைய கேரியரில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். இவர் தன் கணவன், குழந்தையுடன் எடுக்கும் புகைப்படம், வீடியோ என அனைத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் தற்போது சௌந்தர்யாவின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதை பார்த்து பலரும் வியந்து விட்டார்கள். ஏன்னா, சௌந்தர்யா அந்த புகைப்படத்தில் சௌந்தர்யா மகன் நன்றாக வளர்ந்து இருக்கிறார். பின் இதை பார்த்த பலரும் எவ்வளவு பெரியவராக வளர்ந்து விட்டாரே! என்று வியப்பில் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

Advertisement