40 வயதை நெருங்கியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது ஏன் ? முதல் முறையாக சொன்ன ஸ்ருதி

0
4527
Sruthi
- Advertisement -

தற்போது உள்ள சீரியல்களை விட 10, 15 ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான சீரியல்களை இன்றளவும் மறக்க முடியாது. அதிலும் சன் டிவியில் ஒளிப்பரப்பான பல தொடர்கள் மாபெரும் ஹிட் அடித்தது. அதில் ஒன்று தான் தென்றல் சீரியல், இந்த தொடரில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் இடம்பிடித்தவர் நடிகை ஸ்ருதி ராஜ். 1996 ஆம் ஆண்டு தளபதி விஜயின் நடிப்பில் வெளியான மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

ஆனால், இவருக்கு சினிமா துறையில் பல படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. அது மட்டுமில்லாமல் இவர் மக்களிடையேயும் அந்த அளவிற்கு பிரபலம் ஆகவில்லை. இதனால் இவர் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். நடிகை ஸ்ருதி ராஜ் அவர்கள் முதன்முதலாக சின்னத்திரையில் தேவயானி நடித்த கோலங்கள் என்ற தொடரில் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு சன் டிவி, விஜய் டிவி,ஜீ தமிழ் என எல்லா சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் சன் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த தென்றல் சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், தென்றல் துளசி என்றால் இப்போது கூட யாராலும் மறக்க முடியாது. அதனால் தென்றல் சீரியலை மீண்டும் யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்ய உள்ளார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. அந்த அளவிற்கு தென்றல் சீரியல் மக்கள் இடையே அதிக வரவேற்பையும், பாராட்டையும் பெற்றார்.

அதற்கு பிறகு அபூர்வ ராகங்கள், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், ஆபீஸ் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களில் முன்னணி நடிகையாக உள்ளார் ஸ்ருதி ராஜ். அதுமட்டுமில்லாமல் இவருடைய அழகுக்கும், நடிப்புக்கும் என ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது இவர் “தாலாட்டு” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய நடிப்பின் மூலம் பல குடும்பப் பெண்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி பல வருடங்களாக வெள்ளித்திரை சின்னத்திரை என நடித்து கொண்டு இருந்தாலும் அவருடைய இளமை ததும்பும் முகமும், அழகும் அவருக்கு 40 வயதை காட்டி கொடுக்காமல் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் சொன்னால் யாராலும் நம்பவே முடியவில்லை. தற்போது இவருக்கு 40 வயதுக்கு மேலாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், இப்போ கூட எனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லி வருகிறார்.

இதனால் ரசிகர்கள் எல்லாம் பல கேள்விகளை இணைதளங்களில் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இவரிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் ‘ திருமணம் இதுவரை செய்யாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டால், எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாது. அப்படி திட்டமிட்டு செய்தாலும் அது சரியாக நடந்தது கிடையாது, எனவே திருமணம் குறித்து எதையும் யோசிக்கவில்லை, அப்படியே செல்கிறேன். என்னைப் பற்றி, எனது திருமணம் குறித்து எனது பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்று கூறியுள்ளார்.


Advertisement