தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் பாடகி சுசித்ரா குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சுச்சி லீக்ஸ் போய் ஸ்ரீ லீக்ஸ் வந்தது என்றும் பல விமர்சனம் செய்து வந்தார்கள் நெட்டிசன்கள். சுசித்ரா ஆர்ஜே சுச்சி என்று பரவலாக அறியப்பட்டவர் சுசித்ரா. இவர் தமிழகத்தை சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளர் ஆவார். மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். அதுவும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து “சுசி லீக்ஸ்” என்ற பெயரில் தனுஷ், விஜய் டிவி டிடி, ஹன்சிகா, திரிஷா, ஆண்ட்ரியா, சின்மயி, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலரின் அந்தரங்க வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியானதால் சினிமா திரையுலகமே அதிர்ந்து போனது. இதையடுத்து பாடகி சுசித்ரா கூறியது, தனது டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து உள்ளார்கள். அதிலிருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்கள் என்று கூறி இருந்தார். மேலும்,அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து வந்தார்.
இதையும் பாருங்க : 21 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தே காணாமல் போன நடிகை சிவரஞ்சனி. அவரது தற்போதைய நிலை.
இந்த விவகாரம் தொடர்பாக சுசித்ராவின் கணவர் கார்த்திக் அவரை விவாகரத்து செய்தார்.இந்நிலையில் தன்னுடைய விவாகரத்துக்குப் பிறகு பாடகி சுசித்ரா அவர்கள் தனது குடும்பத்திலிருந்து விட்டு விலகி அடையாரில் உள்ள வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். இதனைத்தொடர்ந்து கடந்து 4 நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போய் விட்டதாகவும் பரபரப்பு எழுந்தது. இந்த நிலையில் பாடகி சுசித்ரா தன்னை வில்லை என்றும் ஒரு பிரேக் தேவைப்பட்டதால் தான் லண்டனுக்குச் சென்று பிரெஞ்ச் குக்கிங் கற்றுக் கொண்டு திரும்பியிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
மேலும், அனிருத் மற்றும் தனுஷ் குறித்து வெளியான வீடியோ குறித்து பேசிய சுசித்ரா, 4.5 லட்சம் பேர் பின் தொடரும் என்னுடைய ட்விட்டர் பக்கத்தை யாரோ தவறாகபடுத்தியுள்ளார்கள். இந்த விஷயத்தால் சினிமா துறையில் இருக்கும் நிறைய பேருக்கு இதனால் பிரச்னை என்பதுதான் எனக்கு மிகவும் மனவலியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் இந்த விஷயத்தில் தேவையில்லாம தனுஷ், அனிருத் எல்லாரையும் சம்பந்தப்படுத்தி விட்டனர். ஆனால், அப்படி வெளியான வீடியோக்கள் ஒன்றைக் கூட நான் இன்னும் பார்க்க கூட இல்லை. அந்த வீடியோக்கள் மார்ஃபிங் செய்யப்பட்டதா என்று கூட எனக்குத் தெரியாது. யார் இதை செய்தார்கள் என்பது விரைவில் எனக்குத் தெரிய வரலாம் என்று கூறியுள்ளார்.