பிரச்சனைக்கு இது தான் தீர்வா ? புகைப்பட கலைஞர் சர்ச்சையை தொடர்ந்து அடுத்த சர்ச்சையில் சிக்கிய சன் டிவி சீரியல்.

0
818
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல் குறித்து ரசிகர்கள் கண்டனம் செய்து வரும் தகவல் தற்போது சோசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து வந்தார். பின் தமிழ், மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார். அதற்குப் பிறகு தான் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார்.

-விளம்பரம்-

இவர் முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற தொடரில் இணை இயக்குனராக பணியாற்றினார். அந்த தொடரின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதற்கு பிறகு கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த தொடர் மத்தியில் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை திருச்செல்வம் இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

திருச்செல்வம் சீரியல்கள்:

மேலும், திருச்செல்வம் சீரியல் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதற்கு காரணம் இவர் இயக்கும் சீரியல் பெரும்பாலும் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்ட கதைகளாக அமைந்திருக்கும். தற்போது இவர் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பி வாழுகிறார்கள்.

எதிர்நிச்சல் சீரியல்:

இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாகவே கருதி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்து வந்து அவர்களை வீட்டு வேலை செய்ய வைக்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

-விளம்பரம்-

சீரியலின் கதை:

இவள் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இருந்தாலும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இது பார்ப்போரையே பரிதாபம் செய்கிறது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் குறித்த ப்ரோபோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இது பலருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, சீரியலில் குணசேகரன் வீட்டில் இரண்டாவது மருமகள் ரேணுகாவின் அம்மா ஊரில் உள்ளவர்களிடம் சீட்டு பிடித்து நடத்தியிருக்கிறார். அப்போது அவருடன் சேர்ந்து நடத்திய இன்னொரு நபர் மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.

சீரியல் ப்ரோமோ:

ஆனால், ரேணுகா அம்மாவிடம் தான் எல்லோரும் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் ரேணுகாவின் அம்மா குணசேகரிடம் உதவி கேட்டு வருகிறார். அப்போது அவர்கள் முடியாது என்று அவமானப்படுத்துகிறார்கள். உடனே, ரேணுகா இந்த பிரச்சனையில் இருந்து வெளி வருவதற்கு வேறு வழியே இல்லை. நீ செத்துப் போய் விடு, நானும் சேர்ந்து சாவுகிறேன் என்று அவர்கள் அம்மாவை திட்டி வெளியே அனுப்புகிறார். பின் ரேணுகா, அழுதழுது இதற்கு தீர்வு சாவுதான் என்று எல்லாம் கூறியிருக்கிறார். சீரியலில் இப்படி ஒரு காட்சி வருவது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கொந்தளிப்பில் ரசிகர்கள்:

அதிகம் தற்கொலை செய்யும் நாடுகளில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் சீரியல்களில் தற்கொலை பற்றி திரும்ப திரும்ப சொன்னால் வீட்டில் இதை பார்த்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை குறைந்து பிரச்சனையிலிருந்து மீளுவதை மறந்து தற்கொலை தான் முடிவு என்று நினைத்துக் கொள்வார்கள். இதனால் இந்த மாதிரி காட்சிகள் எல்லாம் சீரியலில் வைக்கக்கூடாது என்று சீரியல் குறித்து பலரும் கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே புகைப்பட கலைஞர்களை இந்த தொடரில் இழிவு படுத்தியதாக சர்ச்சை எழுந்து இருந்தது என்பது குறிப்பிடதக்கது.

Advertisement